சந்துக்குள் ஒரு தாஜ்மகால்...!
மெல்லிய முத்துக்களாய் மேலுதட்டு வியர்வைத்துளிகள்
மருண்ட விழிகளுக்குள் உருண்ட திராட்சைகள்
துடிக்கும் உதடுகளை உள் பக்கம் மடித்தாய் திறந்தாய்
காதோர கூந்தல் இழை நீரில் நனைந்த மயிலிறகாய்
விம்மி தணிகின்ற நெஞ்சை நீவுகின்றது உன் கரம்
விக்கல் எடுப்பது போல் திக்கி சிக்கலாய் பின்னிப் பிணைந்து
வந்து விழுந்த வார்த்தைகள் தெளிவற்று இருந்தாலும்...
தேனாக விழுந்தது என் காதில் "வழிய விடுங்க நான் போகணும்"
என்று சொல்லி விட்டு நான் வழிவிட்டதும் மின்னலாய் ஓடிவிட்டாய்
வாழ்வில் நாம் இருவரும் ஒன்று சேராமல் போனாலும் எனக்கு
சற்று இருளான நம் தெருவின் குறுகல் சந்திற்குள் அன்று நடந்த
சந்திப்பின் நினைவுகள் இன்றும் அத்தெருவை கடக்கும் போதெல்லாம்
வந்து போகும்.. நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்திருந்த போது
அம்மாவின் குரல் "டவுனுல கட்டி கொடுத்துருக்காங்களே நம்ம டீச்சர் மக
அவ எப்ப வந்தாலும் இந்த சந்துக்குள்ளயே வந்து நின்னுகிட்டு போறாடா!
அப்டி இங்க என்னாத்த கண்டாளோ! என்றவுடன் என் மனதிற்குள் நம் காதல்
புதைந்த இடமாக தோன்றியது அந்தத் தெரு!
சட்டென்று எனக்கு அச்சந்து தாஜ்மகாலாக தெரிந்தது...!
,
மெல்லிய முத்துக்களாய் மேலுதட்டு வியர்வைத்துளிகள்
மருண்ட விழிகளுக்குள் உருண்ட திராட்சைகள்
துடிக்கும் உதடுகளை உள் பக்கம் மடித்தாய் திறந்தாய்
காதோர கூந்தல் இழை நீரில் நனைந்த மயிலிறகாய்
விம்மி தணிகின்ற நெஞ்சை நீவுகின்றது உன் கரம்
விக்கல் எடுப்பது போல் திக்கி சிக்கலாய் பின்னிப் பிணைந்து
வந்து விழுந்த வார்த்தைகள் தெளிவற்று இருந்தாலும்...
தேனாக விழுந்தது என் காதில் "வழிய விடுங்க நான் போகணும்"
சற்று இருளான நம் தெருவின் குறுகல் சந்திற்குள் அன்று நடந்த
சந்திப்பின் நினைவுகள் இன்றும் அத்தெருவை கடக்கும் போதெல்லாம்
வந்து போகும்.. நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்திருந்த போது
அம்மாவின் குரல் டவுனுல கட்டி கொடுத்துருக்காங்களே நம்ம டீச்சர் மக
அவ எப்ப வந்தாலும் இந்த சந்துக்குள்ளயே வந்து நின்னுகிட்டு போறாடா!
அப்டி இங்க என்னாத்த கண்டாளோ! உயிரற்று போன மனங்களுக்கு நடுவே
உயிருள்ள இடமாய் மாறியது என் தெரு! சட்டென்று எனக்கு அச்சந்து
தாஜ்மகாலாக தெரிந்தது...
,
No comments:
Post a Comment