தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
இந்த முள்ளு மரம் கீதே அத்த வள்ரவுடாம செய்ய இன்னா தெரிமா பண்ணணும் ? அத்து செடியா இர்க்கப்பவே வெட்டி எர்ஞ்சுட்ணும்..! நல்லா அத வள்ரவுட்டா இன்னா ஆகும்?
அது நல்யா காய்ச்சி இஸ்ட்ராங்கா வள்ந்து நிக்கும்... அப்ப போயி அத்த வெட்னா உன் கை தான் நோவும்.. அத்தே மேறி தான் உன் எதிரியையும் வள்ர விடவே கூடாத்து..! சர்யாபா..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"வளரும் போதே வெட்டிறு முள்ளு... அதான் உன் தில்லு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இளைதாக முள்மரம் கொல்க ;களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒல்கத்த படச்ச கடவுளயே நீ பிச்சை எடுக்க போன்னு சாபம் உட்டுருக்காரு திர்வள்ளுபரு..! படா தில்லான கொரளுபா..! அவரு கோவத்துல சொன்னத அப்டியே ஒரு லுக் வுடுவமா..!
இந்த ஒல்கத்த படச்சவன் இத்த படய்க்கும்போதே மத்தவங்க கிட்ட கையேந்தி தான் பொயப்ப நட்த்தி உசுர் வாழணும் அப்டின்னு சில மன்சங்களையும் படச்சி மட்டும் இர்ந்தான்னு வையி..!
மவனே..! அவங்க எப்படி கையேந்தி அலையுறாங்களோ, அத்தே மேறி படச்சவனும் தெருத் தெருவா கையேந்தி அலைஞ்சு அலைஞ்சே தொலியட்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"கையேந்தரவன் இர்க்குற பூமி..அங்க கையேந்தி நிக்கட்டும் சாமி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
பிரிச்சினை இல்யாத வாழ்க்க எங்கியாவது இர்க்குதா? எதிர்கால்த்துல வர்ற பிரிச்சினிய அத்து வர்றதுக்கு மின்னாடியே தெர்ஞ்சிகினு அதுக்கேத்யா மேறி வாழ்றத்து தான்பா வாழ்க்க!
அப்டி வாழாம எதுவா இர்ந்தாலும் வந்த்ய பின்னாடி பாத்துக்கிலாம்ன்னு நீ வாழ்ந்தா..அந்தய பிரச்சினை வர சொல்லோ தான் தெர்யும் நீ பண்ணது எம்மாம் பெர்ய தப்புன்னு..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"வர்றத மின்னாடியே யோசி.. வந்த பின்யாடின்னா நீ லேசி" (Lazy)
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உன் மன்சுக்குள்ள நீ எத்த நென்ச்சாலும் சின்னதா நெனிக்கக்கூடாத்து...! மன்சுல நெனிக்கிறத பெர்சா நெனை,நல்லதா நெனை,பெர்மயா நெனை..! ஒருக்கா நீ நெனிச்சது..
நட்க்காம பூட்டாலும் அடடா நாம நென்ச்சது நட்க்காம போச்சேன்னு ஒரியாவாம நட்க்குதோ நட்க்கலையோ எப்யும் நல்லதையே நென்ச்சிகினு இருக்கணும்...!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நல்லதையே நெனை... அதான் உனுக்கு துணை"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நாம அல்லாரும் வாழ்க்கையில பெர்ய மன்சங்கோ பேஸ்ன பேச்ச கேட்டு நட்ந்தா ஒரி ஆவாம வாழலாம்.! ஒழுக்கமா நடக்கிற பெர்ய மன்சன் வார்த்த எப்டி தெரிமா ஓதவும்?
கால வச்சா வழுக்கி உடுற சேத்து நெல்த்துல,நடக்க சொல்லோ கையில ஒரு கைத்தடி கண்க்கா அந்த வார்த்த,நம்ம கூடவே இர்ந்து வாழ்க்கயில சறுக்கி வுயுந்துடாம காப்பாத்தும்.!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பெர்யவங்க பேச்ச நம்பு... உன் வாழ்க்கைக்கு அது கம்பு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
தலய மொட்ட அட்ச்சிகினோ இல்ய சடமுடி தாடி வள்த்துக்கினோ சாமியார் கணக்கா வெளிய காமிச்சுக்கினு உள்ளாற அல்லா மொள்ளமாரித்தனம் பண்றவங்களே.! கேளுங்க..!
நீங்க அல்லாரும் கெட்டத உட்டுட்டு ஒயுங்கா நேர்மியா நாயமா நட்ந்தாலே போதும் இந்தய ஒலகம் உங்கள பழிச்சி பேசாத்து.! நீங்க சாமியார் கணக்கா வேசம் கட்டவும் வோணாம்.!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"முடிய வளத்து மோசமா வாழாத்த... மூடி மறைக்காம பாசமா வாழு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நெர்ப்பு ஓன் உடம்புல பட்யு புண்ணாய்ட்ச்சுன்னா அந்த தயும்பு வெள்ள அல்லாத்துக்கும் தெரியும் ஆன்யா உள்ளாற ஆறிப்பூடும்..ஆனா எந்தய காயம் ஆறாது தெரிமா...!?
வாய தொர்ந்து நாக்கு மேல்ய பல்லப் போட்டு நீ பேஸ்ற கெட்ட வார்த்த இர்க்குதே அது எத்தினி வர்சம் ஆன்யாலும் ஆறவே ஆறாது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"தீயில சுட்டா கூட ஆறும்.. தீய நாக்குல சுட்டா ஆறாது"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உனுக்கு தோஸ்த்தா இர்க்கவன் எந்தய தப்புத்தண்டாவும் செய்யாதவுனா இர்க்கணும்..! அப்டி ஏதாவுது கேப்மாரித்தனம் பண்ற ஆளா இர்ந்தா அவுன நீ இன்னா தெரிமா பண்ணணும்..?
உங்கிட்ட இர்க்குற எத்யாவது ஒண்ய கொட்த்து"போய் தொல்ஞ்சுரு சனியனேன்னு" கயட்டி வுட்டுட்டு வந்துர்ணும்..! அதான் நல்து.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நல்லவன் தோள்ல கை போடு...நாசமாபோனவன கயட்டி வுடு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
மருவுருக மாசற்றார் கேண்மை; ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா
பெர்ய பெர்ய பங்ளா வூட்டுக்குள்ள போனா தரயில பளிங்கு கல்லு பதிச்சு இர்ப்பாங்கோ..! அதாண்ட எது போன்யாலும் சொம்மா கண்ணாடி மேறி காமிச்சு குட்த்திரும்.! அத்தே மேறி..
மன்சன் நெஞ்சுயுக்குள்ளாற இன்னா நென்ச்சாலும்..., அத்த மூடி வச்சாலும் உன் மூஞ்சியே அதெல்லாத்தியும் காமிச்சு குட்த்திரும்...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"மன்சுக்குள்ள மர்ச்சது... மூஞ்சி மேல தெர்யும்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒரு மன்சனுக்கு கெட்டது எதுன்னா இன்னா இன்னா கேப்மாரித்தனம் செய்யக் கூடாத்தோ அத்த செஞ்சான்னா அவன் காலி..! இதான் அல்லாத்துக்கும் தெரிமேன்றியா!
இன்னொண்யும் இருக்குபா.! இன்னா இன்னா வேலய கரீட்டா செஞ்சே ஆகணுமோ அத்த செய்யாம உட்டாலும் அவன் காலி..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"கெட்டத செய்வே செய்யாதே.. நல்லத செய்யாம இர்க்காதே"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒரு வேலய இஸ்டாட் பண்ண சொல்லோ மொதல்ல, அத்த எப்டி நல்யா செய்றது? அதுல ஏதுனாச்சும் பிரிச்சினை வர்மா? அப்டி வந்த்யா அத்த எப்படி தீர்க்குறது? இத்தனையும்...
அல்சி ஆராஞ்சு பாத்து தான் இஸ்டாட் பண்ணணும்..! அத்தவுட்டுட்டு ஒன்யும் ஓசிக்காம இன்னா வந்தாலும் பாத்துகிலாம்ன்னு அஸ்ட்டுதன்மா துணிஞ்சு செய்றது பெர்ய குத்தம்பா.
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பிளான் பண்ணி பண்ணு.. இல்லாட்டி நீ மண்ணு"
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நல்யா பட்ச்ச புலவரு எப்படி இர்க்கணும்ன்னா.!அல்லாத்தோடயும் சந்தோஸ்மா கல்கலன்னு சிர்ச்சு பேசி பயகற நல்ய குணம் இர்க்குணுமாம்..! அவுரு கிளம்ப சொல்லோ, அடடா...
இந்தய மன்சன் அதுக்குள்ள கிளம்புறானே, அப்பாலிக்கா இன்னொரு தபா இவர எப்ய கண்டுக்க போறமோன்னு அப்டியே நாம பீல் ஆவணுமாம், அதான் புலவருக்கு லச்சணம்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..!
"குஜாலா இர்க்கணும் புலவன் பேச்சு... நீ பிரிஞ்சா நிக்கணும் கேக்குறவன் மூச்சு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அணைத்தே புலவர் தொழில்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
மன்சுக்குள்ள நெரியா ஆசய வச்சுக்கினு ஒன்யுமே தெர்யாதது கண்க்கா அதுக்கு அல்லாம் ஆசயே படாது மேறி ஆக்ட் குடுக்குற ஆள நம்பாத்தே.! அவன் ஒரு விசம் புட்ச்ச ஆளு.!
அவனை மேறி ஒரு துரோகி.... ஈவு இர்க்கம் இல்லாத ஆளு இந்தய ஒல்கத்துல ஆருமே கடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"வேசம் போட்டா துறவி..... அவன்மோசமான பிறவி"
சோக்கா சொல்லிக்கீரார்பா " தல"
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
வாய்க்கயில வேலிக்கு ஆகாம உருப்படாம போர்து யாரு தெரிமா?ஒரு நாட்டயே ஆட்சி செஞ்சுனுக்குற ராஜா நமக்கு தோஸ்த்தா இர்ந்தாலும், இல்ல அவ்ரு சங்காத்தம் உனுக்கு கெட்ச்சாலும்...
நீ சோம்பேறியா இர்ந்தா அத்தினியும் வேஸ்ட்டு.. அத்த நீ புர்ஞ்சுக்கவே மாட்ட.! உன் கொண்த்துக்கு அதுனால எந்தய பிர்யோஜன்மும் இல்ல.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"உனுக்கு நல்ல பிரண்டு ராஜா...சோம்பேறியா இர்ந்தா நீ கூஜா"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
நீ ஆர வோணா நம்பு ஆன்யா ஒர்த்தர பத்தி தெளிவா தெர்யாம அவன் மேல்ய மட்யும் அன்ப வச்சிடாதே.! அத்து யாருன்னா? தெர்ஞ்சிக்க வேண்டியத தெர்ஞ்சுக்காத முட்டாள பாத்து..
அய்யோ பாவமுன்னு நம்புனே அவ்ளோதான்.! அவுன் செய்ற முட்டாள்தனம் உனுக்கும் வந்துரும்,நீ எவ்ளோ தான் உசார் பார்ட்டியா இர்ந்தாலும் இப்டியாப்பட்டவன நம்பாதே.
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"தோஸ்த்து லூசா.. உன் வாழ்க்கை லாசு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
இந்தய ஒல்கம் எப்ப தெரிமா உன்னிய மெச்சாயாது? நீ வேற எதுல வோணா உர்தியா இஸ்ட்ராங்கா இர்ந்தாலும் செரி,அத்தெல்யாம் ஒன்யும் மேட்டரு கடியாத்து.!
நீ செய்ற தொழிலு இர்க்கு பாரு அதுல்ய மட்டும் உர்தியா இஸ்ட்ராங்கா இல்லாங்காட்டி இந்தய ஒல்கம் உன்னிய மதிக்கவே மதிக்காதுபா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"செய்ற தொழில நம்பு..இல்லினா உலகம் பேசும் வம்பு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
எனைத்திட்பம் எய்திய கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
இந்தய ஆத்து மண்லாண்ட குயி பர்ச்சா தண்ணி ஊறி வந்துகினே இர்க்கும் பாத்துர்க்கியா? எவ்ளோ ஆழ்மா குயி தோண்ட்றமோ அதுக்கேத்யா மேறி தண்ணி சுர்ந்து மேல வரும்..!
அதே மேறி தான்பா, நீ எவ்ளோ பட்ச்சியோ அதுக்கேத்யா மேறி தான் ஒன் அறிவும் சுரக்கும்.! ஆயமா பட்ச்சா தான்பா நெரியா அறிவு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"தண்ணிய சுர்க்குது கேணி.. அறிவ சுர்ந்தா நீ ஞானி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
ஒரு வேல்ய ஒர்த்தராண்ட குட்க்குறத்துக்கு மின்னாடி இன்னா பாக்கணும்ன்னா.! அந்தய வேலிக்கு அவன் கரீட்டா ? அத்தில அவுனுக்கு மின்னாடியே அன்பவம் இர்க்கா?..
அந்தய வேலில்ல அவன் கில்லியா? இப்படி அல்லாத்தியும் அல்சி ஆராஞ்சி அப்பால தான் அந்தய வேலிய அவுனாண்ட தர்ணுமாம்ப்பா... சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"வேலக்காரன் கில்லின்னா...வேலய குடு சொல்லி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
வர்மையில பிச்ச எட்த்து பொயக்குறத்த வுட கொடுமியானது இன்னா தெரிமா நைனா? அட்த்தவனுக்கு கொடுக்க பெர்ய மன்சு இல்யாம துட்ட சேத்து வச்சிக்கினு ஆருக்கும் அத்த..
தர்றாம தனியா குந்திகினு துண்றான் பாரு பேமானி!அவனாண்ட சொல்லுங்க இப்டி துண்றது தாண்டா பிச்ச எட்க்குறத வுட கேவுலமின்னு....சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"தன்யா துண்ணாத மச்சி.. அத்து பிச்சயவுட எச்சி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
நீ வாய்க்கயில எதுக்கு மெர்சலாவுரியோ இல்யோ ஒன்யே ஒன்யுக்கு மட்யும் மெர்சலாகியே ஆவுணும்.!அது இன்னான்னா இந்தய பொல்யாத ஆசை இர்க்குதே அத்த கண்டுதான்.!
அப்டி மெர்சலாகலின்னா ஆச ஒன் கூட்யே இர்ந்து ஒன்ய கெட்து குட்டிச் செவுராக்கி குயி பர்ச்சு உள்ய தள்ளிடும்.! ஆசக்கி அஞ்சி வாய்றது தான் நாயமான வாய்க்கை...
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"ஆசய கண்டு நீ அஞ்சு.. இல்லாட்டி அது உனுக்கு நஞ்சு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அஞ்சுவது ஓரும் அறனே;ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
உனுக்கு ஆராச்சும் அள்வுக்கு மீறி ட்ரபுள் கொட்த்தாலும் அத்த பொர்மியா பொர்த்து போறது தான் நல்யது..! அத்த விட நல்யது இன்னான்னா அத்தயே எப்யும் நென்ச்சிக்காம இர்க்குறது!
அட ஆமாபா..!அப்டி நீ அத்த மர்ந்து போறது பொர்த்து போர்த வுட நல்யதாம்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"கெட்யத பொர்த்து போனா மன்சன்..! அத்த மர்ந்து போனா நீ பெர்ய மன்சன்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பொறுத்தல் இறப்பினை என்றும் ; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
உன்யோட விரோதியா இர்க்குறவன் திமிர... அவன்யோட ஜபர்தஸ்த்த ஒன்யுமே இல்லாம ஆக்க நீ இன்னா தெரிமா செய்ணும்?! அவுன பழி வாங்ணுமா? ஆள வுட்டு அடிக்கணுமா?
அத்தெல்லாம் ஒன்யும் ஓணாம்பா.! நீ நேர்மியா ஒழச்சு அம்பானி கணக்கா துட்ட சம்பார்ச்சு சேத்துகினே இர்ந்தா அத்து ஒண்ணே உன் விரோதிய கத்தி மேறி குத்திகினே இருக்கும்.!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
நீ சேத்து வச்ய சொத்து.. ஒன் எதிரிக்கு கத்தி குத்து...
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
செய்க பொருளை;செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
நாம பேஸ்ற ஒவ்வொரு வார்த்தியும் மீனிங்கா இர்க்கணும் நைனா.! அப்டியா பட்டத மட்யும் தான் பேஸ்ணும், அத்து கேக்கறவங்களுக்கும் பிரியோஜன்மா இர்க்கணும். அத்த வுட்டுட்டு..
பிரியோஜன்மா இல்யாத வார்த்திய பேசிகினே இர்க்கறது கூடவே கூடாத்துபா...சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"பண்பா பேசு..ஆனா பச்சயா பேசாதே"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
நாலு நல்ய விஸ்யம் இர்க்கா மேறி நாலு கெட்ய விஸ்யம் இர்க்குதுபா! அந்தய நாலு எதுனா ஒருவேலய முடிக்காம அப்டியே ஜவ்வா இயு இயுன்னு இஸ்க்கர்து, மறதி,சோம்பேறித்தனம், எப்யுமே தூங்கினுருக்குற தூங்கு மூஞ்சி...
இந்தய நாலு கெட்ய விஸ்யம் தான் கெட்டயிஞ்சு போர்வங்கோ இஸ்டமா ஏறி குந்திக்கிற வண்டியாம்!சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.." நாசமா போர்துக்கு நாலு கெட்டது போதும்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
உனுக்கு ஆராச்சும் ட்ரபுள் கொட்த்தா எவ்ளோ பேஜாரா இர்க்கும்!அத்தே மேறி தான் நீ இன்னொர்த்தருக்கு தர்றதும்! உன் மன்சார ஆருக்கும் அப்டி செய்யாத்தே.
மத்யவங்களுக்கு தம்மாத்தூண்டு கஸ்டத்த கூட்ய தர்றாதே... எந்த கால்த்துலயும் எந்த மன்சன்கிட்டயும் உன்யால ஒரு கஸ்டம் அப்டின்னு ஒரு பேச்சி வர்வே கூடாத்து...
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"கஸ்டத்த கொட்த்து வாழாதே.. இஸ்டத்த கொட்த்து வாழு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
உன்னாண்ட ரொம்ய தோஸ்த்தா இர்க்குறா மேறி வெள்ய காட்டிகினு மன்சுக்குள்ள ஒன்ய கலீஜா திட்டினு இர்க்குறவன் உனுக்கு தோஸ்த்தே கடியாத்து... அவன் படா கேடிபா.!
அவுன நீ இன்னா பண்ணணும்?அவன் இன்னா பேஸ்னாலும் அதுக்கு தேவயே இல்யாம சிர்ச்சு சிர்ச்சு அவுன காண்டாக்கி ஒன் சங்காத்தமே வோணான்னு சொல்லி ஓடுற மேறி பயகணும்.
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"உன்ய கேலி பண்ணவனை... சிர்ச்சே காலி பண்ணு"...
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
தீனா கொரலு...
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
மன்சனுக்கு மன்சன் நல்யா பேசி கல்கலப்பா சிர்ச்சிகினே பயகி தானும் சந்தோஸ்மா இர்ந்து மத்தவினயும் சந்தோஸபடுத்துணும். அப்டி பயகாம முசுடா இர்க்குற மன்சனுக்கு இன்னாகும்?
இம்மாம் பெர்யா ஒலகம் நல்யா வெள்ச்சமா இர்க்குற பகலு பொயுது அவுனுக்கு மட்யும் ராவாப் பூடும்..சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"சிர்ச்சி பேசி பழகு...அல்லாட்டி ராவாயிடும் பகலு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
No comments:
Post a Comment