Thursday 27 February 2014

இரு வரிக்கதைகள்..!

2வரிக்கதைகள்.!

என்ன வரம் வேண்டுமென்றார் கடவுள்,அழகான இளம்பெண்கள் என்னை விரும்பவேண்டும் என்றான்! அப்படியே என்றார்! அங்கு ஒரு பிரேசியர் கிடந்தது.

சிவப்பு சேலை அதுதான் டியர் அடையாளம் SMSவந்தது, மனைவியிடம் வேலை என சொல்லிவிட்டு கிளம்புகையில் பார்த்தான் அவள் சிவப்பு சேலையிலிருந்தாள்.

பிரபலம் ஒருவர் பேர் சொல்லி நண்பனிடம் இருந்து போன்,அவரு செத்துட்டாரா இல்ல சாகலியா சீக்கிரம் சொல்லு,என்ன அவசரம்டா !நான் ஸ்டேட்டஸ் போடணும்!

சூரியனை விட பெரிய கோள்கள் உள்ளது அதற்கு முன் பூமியே கடுகு என வாசித்து கொண்டிருக்கையில்,இடத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை என்றது டிவி.

ஆளு அவுட்டுங்க,பரவாயில்லை காப்பாத்திடலாம்! ஏன் டாக்டர் செத்தவனை எப்படி காப்பாத்துவிங்க நீங்க கடவுளா? இல்லை நான் அரசியல்வாதியும் கூட!

ஆயிரம் ரூபாய் கட்டு தெருவில் கிடந்தது! வேகமாக எடுத்து வந்து மனைவியுடன் நகைக் கடைக்கு போனான்! போலீஸ் கைது செய்தது!பூரா கள்ளநோட்டாம்!

சுகர் இருப்பதால் ஸ்வீட் தின்ன மனைவி விடமாட்டாள்,ஒருவிருந்துக்கு தனியாக போனான் ஆசையோடு ஸ்வீட் எடுக்க செல்கயில் அவன் டாக்டர் வரவேற்றார்.

குழந்தைக்கு சுகமில்லை மோதிரத்தை எடுத்துகிட்டு பணம் குடுங்க என கேட்டவனுக்கு 500ரூ கொடுத்தான் நண்பன்,இது தங்கமில்லடா என்றேன். தெரியும் என்றான்.

புதுத்தம்பதிகள் திருமணமானதிலிருந்து ஓய்வில்லா அலுவல்! இருவரும் ஆபிஸில் பேசி4 நாட்கள் விடுமுறை வாங்கி வீடுவர,தாத்தா பாட்டி! 4 நாளு இருக்கலாம்னு வந்தோம்!

புதுவீட்டுக்கு குடி வந்த பெண் எஸ்.ஐ காதில் விழுந்தது அண்டைவீட்டு பேச்சுக்குரல் 3 கல்யாணம் பண்ணிட்டானே பாவி! எட்டிப்பார்க்க டிவி சீரியல்.!

No comments:

Post a Comment