Friday 17 April 2015

சாமி தருமா வரம்.!

ஃபேஸ்புக் மோகத்திலிருந்து விடுபட கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் ஒருவன், சாதாரணமாக இது போல தவமிருந்தால் நேரில் வரும் கடவுள் இப்போது வரவில்லை.!

தவத்தின் கால அளவை இருமடங்காக்கினான்.. வரவில்லை மும்மடங்காக்கினான் அப்போதும் வரவில்லை.. நான்மடங்கு ஐம்மடங்கு... ம்ஹும் கடவுள் வரவே இல்லை.. கடைசியாக ஒரு முறை என ஆறாம் முறை தவத்தை நீட்டினான்.!

திடீரென ஓடி வந்தார் கடவுள்.. சொல் பக்தா உன்னை நான் காண வர தாமதமாகிவிட்டது என்றார் படபடப்புடன்.. அந்த மனிதன் கோபமாக இது ஆறாவது முறை ஏற்கனவே ஐந்து முறை தங்களை அழைத்தேனே ஏன் அப்போதே வரவில்லை என்றான்.!

அடடா இதற்கு முன்பு 5 முறையா அழைத்தாய்..! இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு என் இன்பாக்ஸில் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே.. நான் உடனே வந்திருப்பேனே.. மன்னித்துக்கொள் நான் FBயில் கொஞ்சம் பிஸி.. ஆமாம் என்ன வரம் வேண்டும்..

என அவனிடம் கேட்ட கடவுள் அதிர்ந்தார்..! அங்கே அந்த மனிதன் செத்துக்கிடந்தான்.

No comments:

Post a Comment