Sunday 26 April 2015

புருடா கப்ஸா ரீல்..

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவில் மகாகவி பாரதியாரைப் பற்றி கேள்விப் பட்டிருந்தார்.. பாரதியின் பாடல் வரிகளில் இருந்த எழுச்சியும் புரட்சியும் அவரை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் பாரதி தமிழ் தவிர ஆங்கில மொழியிலும் புலமை உள்ளவர் எனத் தெரிந்து கொண்டார்.. அவர் ஆங்கிலத்தில் பாடல் எழுதினால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சிறப்பு என நம்பினார்.!

அப்போது பாரதியார் ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி.. பிரெஞ்சு காலனியான புதுவையில் பதுங்கி இருந்தார். இதை தெரிந்து கொண்ட சர்ச்சில் பாரதியாருக்கு ஒரு ரகசிய தூதுவரை அனுப்ப முடிவு செய்தார்.!

அந்தத்தூதரும் பாரதியாரை ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தார்.. ஆங்கிலப்பாடல் எழுத வேண்டும், விக்டோரியா மகாராணியை புகழவேண்டும் போன்ற சர்ச்சிலின் கோரிக்கைகளை சொன்ன தூதுவர் பாரதியின் சம்மதத்தை கேட்டார்.

அதற்கு பரிசாக பாரதியார் மீதுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும், அவர் தலைமுறையினருக்கு உயர்ந்த குடும்ப பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்படும் பாரதிக்கு சர் பட்டம் வழங்கப்படும் அதற்கும் மேலாக அவருக்கு அளிக்க இருந்த தொகை எவ்வளவு தெரியுமா?அந்த காலத்து பிரிட்டிஷ் ஒரு கோடி ரூபாய்.!!!!

இப்போதைய அதன் மதிப்பு 650 கோடி ரூபாய்..! அதற்கு பாரதி சொன்னார் பரங்கியர்களே என் தாய் மண்ணை அடிமையாக்கியது போதாது என்று என்னையுமா அடிமை ஆக்கப் பார்க்கிறீர்கள் இந்திய தாயை பாடிய நான் ஒரு போதும் உங்கள் ராணியை பாடப்போவதில்லை.. செத்து மடிவேனே தவிர..

ஆங்கில அரசிடம் பணிய மாட்டேன் என முழங்கினாராம்.. தூதரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சர்ச்சில் வியந்து நாட்டில் இப்படியும் உத்தமர்கள் உள்ளார்களே என சிலாகித்து பலரிடம் இதைப் பற்றி தான் சாகும் வரை பேசிக்கொண்டிருந்தாராம்.

இது தான் நம் மகாகவி பாரதி.. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..

எழுத மறந்த ஒன்று முதல் கமெண்ட்டில்....

No comments:

Post a Comment