Friday 3 April 2015

குறள்நெறி குட்டிக்கதைகள்..

இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்டுக் கொண்டே ஆவலாக வீட்டிற்குள் நுழைந்தான் ரவி..

"தட்டை எடுத்து வையுங்க சூடா எடுத்துட்டு வர்றேன்" என்றாள் சமையலறையில் இருந்து அசரீரியாக மனைவி.. சிறிது நேரத்தில்

மனைவி வெளியே வர கையில் ஆவி பறக்க பாத்திரம்.. ஜலதோஷம் பிடித்ததால் ரவிக்கு சமையல் மணம் தெரியவில்லை.! ஆசையுடன் மூடியைத் திறந்தான் முகம் வாடி போனது..

சட்டியில் உப்புமா..!!!! என்னங்க பாக்குறிங்க சாப்பிடுங்க என்றாள்.. ஒரு வினாடி யோசித்தவன் சர்க்கரை வேணாம்... சட்னி இருக்கா என்றான்.. ஓ...இருக்கே இந்தாங்க என தந்தாள்..

வேறு ஒரு வார்த்தை பேசாமல் சிரித்த முகத்துடன் உப்புமாவை சட்னியுடன் சுடச்சுட அள்ளி விழுங்கலானான் ரவி

#குறள்நெறிக்_கதைகள்

(நீதி : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண...)


மஞ்சுளா பரபரப்பாக எழுந்து அன்றைய வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள். காலிங்பெல் அடித்தது கதவை திறந்தாள் பெட்டி படுக்கையுடன் ஊரிலிருந்து அவள் மாமியார்..!

"இன்னும் ஒரு மாசம் இங்க தான்" என்றபடி உள்ளே நுழைந்தாள் மாமியார். அதனால என்ன அத்தை ஒரு வருஷம் கூட இங்க இருங்களேன் என்று சிரித்த முகத்துடன் கூறினாள் மஞ்சுளா.!!!

#குறள்நெறிக்_கதைகள்

(நீதி : துன்பம் வரும் வேளையில் சிரி...)


எப்படா கல்யாணம் பண்ணிக்கப் போற என்ற பெரிய அண்ணன் கேட்ட கேள்வி ரவியை சலிப்படைய வைத்தது. அண்ணா எத்தனை தடவை சொல்றது எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்.. 

யாரையும் லவ் பண்றியாடே..?

இல்லண்ணா அப்படி இருந்தா சொல்ல மாட்டேனா..!

சரி அப்ப யார் அந்த திவ்யா?!

அண்ணா அது வந்து... அது... அது எப்படி உங்களுக்கு...

எல்லாம் தெரியும்டா ஒரு நாளைக்கு எத்தனை வாட்ஸ் அப் மெசேஜ்.. எல்லாம் பார்த்தேன்.. அந்த பொண்ணு அப்பாகிட்ட பேசிட்டேன் அவங்களுக்கும் ஓகேவாம்.. இப்ப என்ன சொல்லுற!

ஹி..ஹி.நீங்க சொன்னா ஓகே தாண்ணே..

வழியாத நான் ஆபிஸ் போயிட்டு வர்றேன் சாயங்காலம் அவங்க வீட்டுக்கு போவோம் ஓ.கே..

(அவர் போனவுடன்) இவருக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியவன் "சித்தப்பா" என்ற குரல் கேட்டு திரும்பினான்.. அண்ணன் மகன் வருண் UKG வாண்டு நின்றிருந்தான்.

என்ன சித்தப்பா அப்பா ஓகே சொல்லிட்டாரா என கேட்க ரவிக்கு ஆச்சர்யம்.. டேய் இது எப்படிடா உனக்கு.. என்றவனிடம் வருண் சொன்னான்..

சித்தப்பா நேத்து கேண்டி க்ரஷ் விளையாட உன் மொபைல் எடுத்தனா அப்ப வாட்ஸ் அப் வந்துச்சு நீ தூங்கிட்டியா அதான் அப்பாகிட்ட காமிச்சேன் தப்பா சித்தப்பா.!

ஓடிப்போய் வருணை அணைத்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.. தேங்ஸ்டா செல்லம் நீ தான் இத அப்பாகிட்ட  சொன்னியா.. குட் தப்பே இல்லை என்றான் ஆனந்தமாக.

#குறள்நெறிக்_கதைகள்

நீதி: குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்....

No comments:

Post a Comment