Saturday 25 April 2015

ஜென் உணவு..

ஜென் துறவிகளுக்கு தேநீர் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர்கள் தேநீர் அருந்துவதே ஜென் நிலை என்பார்கள்.. தமிழகத்தில் இருந்து ஒருவர் சீனா சென்றார் அங்கு புகழ்பெற்ற ஒரு ஜென் குருவை சந்தித்தார்.. குருவே நான் தமிழ்நாட்டுக்காரன் போதி தர்மர் வாழ்ந்த நாட்டவன் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளவும் எனக் கேட்டான்.. அந்த குரு அவன் சொல்லைக் கேட்கவேயில்லை.!

ஆனந்தமாக இரு கைகளிலும் ஒரு பீங்கான் கோப்பையை பிடித்து ஆவி பறக்கும் தேநீரை சொட்டுச் சொட்டாக உறிஞ்சிக்குடித்துக் கொண்டிருந்தார்.. தமிழர் திரும்பத் திரும்ப கேட்டும் அவரது கவனம் கலையவே இல்லை.! ஒரு வழியாக அந்தக் கோப்பை காலியானதும் மெல்ல வாய் துடைத்து தமிழரைப் பார்த்தார் ஜென் குரு.. இப்போது சொல் நீ யாரப்பா என்றார் தமிழரைப் பார்த்து.

தமிழருக்கு கோபம்.. குருவே இதுவரை நான் யார் என்று 6 முறை கூறிவிட்டேன் அது உங்களுக்கு கேட்கவில்லையா என்றார்.. அதற்கு ஜென் குரு சொன்னார் தம்பி நான் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன் அது தான் என்றார்.. அதனாலென்ன தேநீர் தானே அருந்தினீர்கள் உங்கள் செவி கேட்காதா என்றார் தமிழர்.! தம்பி.. ஜென் குருவாக இருப்பவர்களுக்கு தேநீர் அருந்துவதும் ஒரு யோகநிலையே..!

ஐம்புலன்களும் தேநீரை அருந்தும் போது அதையே ரசிக்கும் அது தான் ஜென் நிலை அது உனக்குப் புரியாது அது புரியும் வரை உன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.. வேறு என்ன வேண்டும் கேள் என்றார்.! தமிழர் யோசித்தார் சரி நாளை உமக்கு என் மனைவி கையால் விருந்து சம்மதமா என்றார். சரி என ஒப்புகொண்டார் குரு.. அப்போ நான் விடை பெறுகிறேன் குருவே என தமிழர் சொல்ல...

குறுக்கிட்டார் குரு "மன்னிக்கவும் தம்பி நான் இன்னும் உன்னை சீடனாக ஏற்கவில்லை அதை பிறகு பார்க்கலாம் அதுவரை அப்படி என்னை அழைக்காதே" என்றார். மறுநாள் தமிழர் வீட்டுக்கு வந்தார் குரு... தேநீர் உட்பட உணவுகள் பரிமாறப்பட்டன.. அதில் ஒரு உணவை மட்டும் குரு சாப்பிடத் தயங்கினார்.. அவரால் அதை சாப்பிடவும் முடியவில்லை.. அந்தத் தமிழரைக் கூப்பிட்டார்..

"இது என்ன உணவு இதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்னால் இதை ஒரு முறை கூட சகித்துக்கொள்ள முடியவில்லையே " இதன் பெயர் என்ன எனக் கேட்டார். தமிழர் சொன்னார் அய்யா இது தான் உப்புமா நாங்கள் அவசர சமையலுக்கு செய்து உண்பது என்றார்.. எத்தனை வருடமாக உண்ணுகிறீர்கள் இதை என்றார்.. தமிழர் சொன்னார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்த வார்த்தை முடியும் போது....

"குருவே" என்ற அலறல் கேட்டது... தமிழர் திகைத்து திரும்பிப் பார்த்தார் அவரது காலடியில் கிடந்தார் ஜென் குரு..!

 #உப்புமா_சாப்பிடுவதும்_ஜென்நிலையே

No comments:

Post a Comment