Tuesday 22 March 2016

ஷத்ரியன் 2016

ம.ந.கூ கோஆபரேட்டிவ் புரொடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்

கேப்டன் IN &AS

#சத்ரியன்_2016
(இவன் தூக்கியும் அடிப்பான் துப்பவும் செய்வான்) சப் - டைட்டில்

திருமா : அந்த அருமைநாயகமோ அவர் மகனோ முதலமைச்சரா வரக்கூடாதுங்க ஆனா எதிர்த்து நிக்க 234 பேருக்கு நாம எங்க போக?

முத் : அதே தான் ஆனா எல்லாரும் ஆளாளுக்கு தனித்தனியா நிக்குறாங்களே நமக்கு யாரு உதவுவா..?

ஜி.ரா : எப்படி நிலைமையை சமாளிக்கிறதுன்னே தெரியலை.. யாரு இதுக்கு பொறுப்பு ஏத்துக்குவா.?

வை.கோ : ஒருத்தரு இருக்காரு அவர் நினைச்சா முடியும்..

மூவரும் : யாரு.? யாரு அவரு?

வை.கோ : பன்னீர்செல்வம்..

மூவரும் : நம்ம ஓ.பி.எஸ்சா.??

வை.கோ : சீமான் மாதிரி கோபம் வர்றா மாதிரி காமெடி பண்ணாதிங்க .. இவரு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் ஒருகாலத்துல ஆக்டிவா இருந்தவரு இப்ப எந்தப்பக்கம் போனா ஆதாயமுன்னு குழப்பத்துல இருக்காரு..

ஜி.ரா : ஓ.கேப்டனா..அவர் அந்த அருமைநாயகம் கூட சேரப்போறதா சொல்றாங்களே..

வை.கோ: அது அவங்களா பரப்புற வதந்தி.. அருமைநாயகம் அவரு மண்டபத்தை எப்ப இடிச்சாரோ அன்னிக்கு சிவந்த அவர் கண்ணு இன்னும் அதே கலர்ல தான் இருக்கு.. அதுக்கு வாய்ப்பு கம்மி..

ஜி.ரா : ஹை சிவப்பு எங்க கலரு அப்ப நாம கூப்பிட்டா வருவாரா அதிகம் சீட் கேட்டா.? முதலமைச்சர் பதவி கேட்டா

வை.கோ : என்ன பேசறிங்க தோழர்.?  நாம நாலு கட்சியிருந்தும் 110 இடத்துக்கு மேல போக முடிஞ்சுதா..? சத்ரியனை கூப்பிட்டு பதவி தருவோம் அவரு கேட்ட சீட்டைத் தருவோம் அருமைநாயகம் எண்ணத்துக்கு கேட்டைப் போட்டு மூடுவோம் என்ன சொல்றிங்கஇவரை விட்டுட்டா 234 தொகுதிக்கு நாம என்ன செய்ய?

மூவரும் : நீங்க சொன்னா சரி தான்.. ஆனா அவரு வருவாரா அந்தம்மா தான் நமக்கு மறைமுக சப்போர்ட்டுன்னு வேற புரளி இருக்கே அதை ஒத்துக்குவாரா.? ப்ளைட் வேற டேக் ஆஃப்ன்னு சொல்லிட்டிங்க..

வை.கோ : அட நாம நடந்து போற கட்சின்னு நாட்டுக்கே தெரியுமே அதெல்லாம் அவர்கிட்ட நான் பேசிட்டேன்.. ம்ம்ம் முத்தரசன் நீங்க தான் அவ்வளவா தெரியாத ஆளு அப்பப்ப அந்த அம்மையாரின் அராஜகம்ன்னு பொது கூட்டத்தில பிரஸ் மீட்டுல மட்டும் தம் கட்டி முழங்கணும் ஓ.கே 

முத் : ஓ.கே.. அண்ணே அதெல்லாம் சவுண்டு ஓவராவே கொடுத்துடலாம் ஒரே ஒரு கேள்வி.. நீங்க எப்ப முதல்வரா...

வை.கோ : சத்ரியனா இருக்குறத விட சாணக்கியனா இரு.. இப்போதைக்கு முதல்வர்ன்னா அது சத்ரியன் தான்.. அவர் பேரைத்தவிர யாரையும் ஜாடையா சொன்னாக் கூட போச்சு சனியன் ஜடை போட்டுடும் ஜாக்கிரதை. வாங்கஅவரை இன்வைட் பண்ண கிளம்புவோமா..

மூவரும் : ஓ.கேண்ணே..

இடைவேளை...

No comments:

Post a Comment