Thursday 17 March 2016

லிங்கனுடன் வாழ்ந்தோம் 3

#லிங்கன்_வளர்ந்த_பூமியில்

பார்ட் - 3

மெழுகுச்சிலை மியூசியத்திற்குள் நுழைந்தோம் லிங்கனின் கார், கைத்தடி, அவரது அறை, அவர் ஆடைகள் & உபயோகித்த பொருட்கள், அத்தனையும் ஒரு பக்கம் அழகிய கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைத்து அதற்கு பளிச்சென நல்ல ஒளி அலங்காரமும் செய்திருந்தனர். அடுத்த பகுதிக்கு சென்றோம்.அங்கு லிங்கனின் வெள்ளை மாளிகை வாழ்க்கை, அவரது குடும்ப துயர நிகழ்வுகள் கடைசியில் அவர் கொல்லப்பட்ட தியேட்டர் என அத்தனை தத்ரூபமாக மெழுகுச் சிலைகளில் வடித்து இருந்தார்கள்.

நேரடியாக பார்ப்பவருக்கு வரலாற்றை உள்ளவாறே உணர்த்தும் படி அவ்வளவு நேர்த்தியான ஆவணங்கள். மியூசியம் நீண்டு கொண்டே போக 30 ஆவது நிமிடத்திலேயே பசிக்கத் தொடங்கியது. ஒரு வழியாக கையில் இருந்த வாட்டர் பாட்டில்களை வைத்துச் சமாளித்து நடந்தோம் அந்தக் குளிரிலும் வியர்த்தது எனக்கு கால் வலிக்க வலிக்க நடந்து ஒருவழியாக அங்கிருந்து வெளியேறி அங்குள்ள உணவகத்திற்குள் சென்றோம்.

வெஜ் சாண்ட்விட்ச் & ஹாட் சாக்லேட் சாப்பிட்டு பசியை விரட்டினோம். இப்போது சாலையின் வெளியே உள்ள லிங்கன் ஹவுஸ்..! லிங்கனைப் பற்றி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த லிங்கன் திரைப்பட மியூசியம் இங்கு அமைந்து இருந்தது.அந்தப்படத்தில் போடப்பட்ட செட்டுகள், நடிகர்களின் உடைகள், பொருட்கள் எல்லாம் மிக அழகாக காட்சிக்கு வைத்திருந்தார்கள். 10 நிமிடத்தில் சுற்றிப்பார்க்க முடிந்தது மணி பார்த்தோம் மாலை 4:30.

இப்போது லிங்கனின் நூலகம் போகவேண்டும் ஆனால் 5 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறது லிங்கனின் நூலகம் பிரம்மாண்டமானது அங்குள்ள புத்தகங்களை எல்லாம் வரிசையாக அடுக்கினால் அது 8 மைல் நீளம் வரும் என அங்கிருக்கும் போஸ்டர்கள் சொன்னது. நிச்சயம் அதை பார்த்து முடிக்க முடியாது. ஆகவே வாசல் வரை சென்று பார்த்து விட்டு மியூசிய வாசலுக்கு வந்தோம்.லிங்கன் நினைவு தபால் தலைகள்...

கொடிகள், நாணயங்கள், போஸ்டர்கள்,  சாவிக் கொத்துகள், தொப்பிகள், ஷீல்டுகள், புகைபடங்கள், டி-சர்ட்டுகள், இப்படி ஏராளமானவை இருந்தன.. எனது கனவான லிங்கன் தொப்பி ஒன்றை வாங்கிக்கொண்டேன். வெளியேறி சாலையோரப் பூங்காவிற்கு வந்தோம்.கடுங்குளிர் எங்களை வாட்டினாலும்.. சளைக்காமல் போட்டோ எடுத்தே டயர்டு ஆனோம். மெல்ல மெல்ல இருட்டியது வானமும் எங்கள் கண்களும்.. குளிரும் அதிகரிக்க...

அத்தோடு அசதியும் வந்து கைகோர்த்துக் கொள்ள அதையும் அழைத்துக் கொண்டு கார் ஏறினோம் மீண்டும் கார் அந்த மெமோரியலைச் சுற்றி சாலையில் கலந்தது வரலாற்று நாயகன் ஒருவர் வாழ்வினை அருகிருந்து பார்த்த பரவசம் உடலெங்கும் ஓட அசதி கண்களை மூட மூடுவதற்குள் விழிகளில் பட்ட காட்சி சாலையோரம் இருந்த பெரிய லிங்கனின் சிலை. 

இப்போது அவர் மெல்லக் கையசைப்பது போல தெரிய இதழ்களில் புன்முறுவல் விரிய கண்ணயர்ந்தோம். பை..பை..லிங்கன்.

நிறைந்தது...

No comments:

Post a Comment