Saturday 9 July 2016

முகனூலரின் கதை

#முகனூலானின்_கனவு

கூரை இடிந்து விழாத அதிசய நாளொன்றில் சென்னை விமானநிலையத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.. மனமெல்லாம் விரக்தி ச்சே தினசரி ஒரு கொலை ரவுடிகள் எல்லாம் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே ரவுடி ஒருவரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்கிறார்கள்.. ஒருவேளை வேறு மாநில அல்லது வேற்று கிரக ரவுடிகளாக இருக்கலாம்னு மனசை ரிலாக்ஸ் பண்ணிக்க ஒரு பார்க்குக்கு போனால் அது சைலண்ட்டாக இருந்தது.!

அட.! இது தான் அமைதிப் பூங்காவா..! விடை தெரிந்ததும் சரி ரெண்டு வாரம் வெளிநாடு போகலாம்னு அமைதி பூங்காவில் இருந்து வெளியேறி வீடு வந்து பாஸ்போர்ட் எடுத்து பார்த்தால் லண்டன் உட்பட சில நாடுகள் செல்ல விசா இருப்பதை பார்த்து பெட்டி கட்டினேன் அதாவது Indexit. அந்த நேரம் மெஸ்ஸி ஓய்வு என அறிவித்துவிட கடுப்புடன் சிலியையும் கலைஞரையும் திட்டிவிட்டு ஆப்ஸில் டாக்சியை அழைத்து ஏர்போர்ட்டுக்கு ஓலா"வினேன்.

இதோ ஏர்போர்ட்டில் வந்து லண்டன் பிளைட்டிற்காக வெயிட்டிங் எதிர்பட்ட பெண்களெல்லாம் மூஞ்சியை மறைத்து பொக்கே,பூனை, புலி முகமுடியில் அலைந்தனர்.. விசாரித்தால் அவர்கள் மார்பிங் பாதுகாப்பு கருதி முகத்தை மறைத்துக் கொண்டதாக சொன்னார்கள்.. வேதனையுடன் டீ சாப்பிட போனேன் அங்கு தக்காளி சூப் தான் இருந்தது.. மோதிரத்தை கழட்டி கொடுத்து ஒரு சூப் சாப்பிட ஆச்சர்யமாய் கடைக்காரர் மீதி காசு தந்தார்.

என்னடான்னு கேட்டா தங்கம் விலை தக்காளியை விட ஏறிடுச்சு அதான் அப்படின்னார். விரக்தியா சிரிச்சுகிட்டே மறுபடி வெயிட்டிங் ரூமுக்கு போய் பேஸ்புக் திறந்தா அண்ணா நான் சுவாதி பேசுகிறேன்னு.. ஒரு மெசேஜ்.. எனக்கு ஒரே குழப்பம் அறிஞர் அண்ணாவுக்கு ஏன் சுவாதி பேசணும்ன்னு நினைச்சுகிட்டே தூங்கிட்டேன்.(கனவுலயும் தூங்குனது நீ தான்யா) ப்ளைட் ஏறும் நேரமுன்னு பக்கத்தில் இருந்த ஒருவர் எழுப்ப விமானமேறினேன்.

விமானத்தில் கோனியாக் வித் ஐஸ் வித்தவுட் ஐஸ் வித் வாட்டர் வித்தவுட் வாட்டர் வித் பெப்சி வித்தவுட் பெப்சி வித் டிராபிகானா வித்தவுட் டிராபிகானா வித் 7அப்.. யோவ்.. போதும்யா ஓவரா போகாதேன்னு சொல்றிங்களா.!ஓகே.. சாப்பிட்டு மீண்டும் தூங்கி லண்டன் வந்து இறங்கினால் அங்கு தரையில் வயிற்றைப் பிடித்தபடி ஒருவர் புரண்டு கொண்டு இருந்தார்.. தெரிந்த முகமாக இருக்கிறதே என எட்டிப் பார்த்தால் அட நம்ம மல்லையா.!இவருக்கு என்ன ஆச்சு.? அவரிடமே கேட்டேன்..

லண்டனில் தலைமறைவாகத் தான் இருந்தேன் ஆனால் மத்திய அரசு அதிரடியாக செயல்பட்டு தன் ரேஷன் கார்டை முடக்கிவிட்டதால் சாப்பிட்டு 4 நாட்கள் ஆச்சு இனியும் லண்டனில் மறைந்திருந்து சாவதை விட அங்கு போய் தப்பிப்பதே மேல் என்றார்.. ஒரு பர்கரை அவருக்கு வாங்கித் தந்துவிட்டு நடக்கும் போது.. ஹல்லோ பிலால் மாலிக் வெல்கம் டூ லண்டன் என குரல் கேட்டு திரும்பினேன் அங்கு ஒய்.ஜி நின்று கொண்டிருந்தார்.

திடுக்கிட்டு விழித்தேன்..

No comments:

Post a Comment