Saturday 4 July 2015

100 ஆண்டுகளுக்கு பின்...

#கிபி2115

நானோ டெக்னாலஜிகள் அரதப்பழசாகி சைனோ டெக்னாலஜிகள் மூலம் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.. சந்திரன் செவ்வாயில் எல்லாம் குடியிருப்புகள் சகஜமாகி இருந்தன பூமியில் பாஸ்போர்ட் அழிக்கப்பட்டிருந்தது.

வேற்று கிரகத்திற்கு மட்டும் சைனோ டெக்னாலஜி மைக்ரோசிப் பாஸ்போர்ட்டுகள் தேவைப்பட்டது.. தினசரி சிங்கப்பூர் துபாய்க்கெல்லாம் சென்னையிலிருந்தே வேலைக்கு போய் வரும் அளவு போக்குவரத்து அதி நவீனமாக இருந்தது.. 

மனிதர்களின் சராசரி ஆயுள் 150 ஆண்டுகளாக இருந்தது.. டிஜிட்டல் புரட்சி சிகரத்தில் இருந்தது.. அமெரிக்காவிலிருந்து வாராவாரம் தன் ஹெலிடாக்சியில் சென்னை திரும்பும் தீபா தன்அபார்ட்மெண்ட்டின் மொட்டை மாடி பார்க்கிங்கில் டாக்சியை லேண்ட் செய்து சோலார் பவர் லிப்டில் 115 மாடியில் இருக்கும் தன் பிளாட்டுக்கு கீழிறங்கினாள்.

தன் விரல் ரேகையை கதவில் ஸ்கேன் செய்து லேசர் சாவியால் கதவை திறந்தாள்.. அங்கே சைனோ டெக்னாலஜியில் இருந்த ரோபோ உயிர் பெற்று தன் எஜமானியை வரவேற்று அந்த நூற்றாண்டின் பானமான ஹாஸ்ட் போட்டு தந்தது.. ரோப்ஸ் ப்ளீஸ் ஸ்விட்ச் ஆன் த டிவி என்ற எஜமானியின் கட்டளை கேட்டு...

தன் முதுகில் இருந்த சாட்டிலைட் புரொஜக்டர் மூலம் எதிரே இருந்த சுவரில் டிவியை ஒளிரச் செய்தது.. தன் ஆப்டிக் கண்ட் ரோல் கண்களை ரிமோட்டாக்கி சேனல் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு வர.. தமிழ் சேனல் போடு என்ற அடுத்த கமெண்ட் வந்தது தீபாவிடம் இருந்து., சட்டென்று திரையில் விஜய் டிவி தெரிய அதில் ஓடிக்கொண்டிருந்தது #கும்கி_திரைப்படம்.

No comments:

Post a Comment