Thursday 2 July 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

என்ன சார் சொல்றிங்க இளம்பிள்ளை வாதம் வந்து இரண்டுக்காலுமே சூம்பிப் போன என் மவனுக்கு விளையாட்டு கத்துத்தர போறிங்களா?!?! அதெப்படி சார் முடியும் என அப்பாவியாய் கேட்டார் மாடசாமி.

ஐயா நாங்க எங்க ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலமா திறமையான ஆளுங்களை பள்ளிகளில் தேடி வாய்ப்பளிக்கிறோம் உங்க பையன் படிக்கிற பள்ளியில் அவனது ஆர்வத்தை பார்த்து தான் அவனை தேர்ந்தெடுத்து இருக்கோம். நீங்க சம்மதம் தாந்தா தம்பியை எங்க அகாடமிக்கு அழைச்சிட்டு போய் சிறப்பு பயிற்சி தருவோம் என்றார் அந்த கோச்.

மாடசாமியைச் சுற்றி இருந்த உறவினர்கள் இதோ பாரு மாடசாமி எந்தக்குறையும் இல்லாதவனே ஜெயிக்க முடியலை..உன் மவன் பாவம் ரெண்டு காலும் இல்லாதவன் அவன் எல்லாம் விளையாடி சாதிக்க முடியுமா? அவன் விதி அப்படி... அவனை எங்கேயும் அனுப்பாதே என்றனர்.

மாடசாமி ஒரு நிமிடம் சிந்தித்தார்.. தன் மகனைப் பார்த்தார் அவன் கண்களில் அதீத ஆர்வமும் சாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது.. சட்டென சொன்னார்.. ஐயா எனக்கு என் மவன் மேல நம்பிக்கை இருக்கு எம்மவனை அழைச்சிட்டு போங்க நான் சம்மதிக்கிறேன் என்றார்.

5 வருடங்களுக்கு பின் இன்று... அந்த ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.. ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த தங்கள் ஊரின் தங்க மகனை வரவேற்க..

நீதி: சோர்வின்றி முயற்சி செய்பவர்களிடம் விதி கூட தோற்றுவிடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாளாது உஞற்று பவர்.

No comments:

Post a Comment