Thursday 16 July 2015

T.R

கவியரசு தெரியும் கவிப்பேரரசு தெரியும் காதல் கவியரசு யார் தெரியுமா..! நீங்கள் முகநூலில் கிண்டலடிக்கும் டி.ஆர் தான்..

எப்படின்னு கேட்டா இந்த நீண்ட பதிவினை படித்தால் தெரியும்.. கரடி என்றோ, டண்டணக்கா என்றோ, நீங்கள் கலாய்க்கும் டி.ஆர். காதல் வரிகளில் கிங்..

இளையராஜா ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்த அவரது திறமை அளவிட முடியாதது.. இசையை விடுங்கள் அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள்.. இனி லிஸ்ட்...

இது குழந்தை பாடும் தாலாட்டு.. இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம்.. (ஒரு தலை ராகம்)

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி விட இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா...

செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்.. ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்.. (இரயில் பயணங்களில்)

நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடல் ஒன்றைத் தேடுது
(நெஞ்சில் ஓர் ராகம்)

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேறுதாம்..ஓ..ஓ.ஓ

விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை.... மொழியோ அமுதம் குழலாகி தொனிக்கின்ற ஓசை.. ஒரு ஆனந்த ராகம்..

(கிளிஞ்சல்கள்)

பொன்னூறும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்.. இந்த மானிடனும் மயங்கிவிட்டான்.. அந்த மானிடமும் மனதை விட்டான்..

அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியிள் அவளே ஆதாரம்...

புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்து..(2) அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை...(2) ஒரு நாகம் போல் காளை ஆடுகின்றான்...

பிரம்னனுக்கும் ஞானம் வந்து உன்னைப் படைக்க அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க... தவிப்பதா.. சிலிர்ப்பதா...அணைப்பதா.. அழைப்பதா...

(உயிருள்ள வரை உஷா)

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே.. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே... எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி..

(உறவைக் காத்த கிளி)

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாற தாமரைப்பூ மீது விழுந்தனவோ.. இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ.. இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள் கலைநிலா மேனியிலே சுவை பலா சுவையைக் கண்டேன்..

ஆஹா... ஆஹா.. நீ ரசிகண்டா..

நான் சொன்னது சரிதானே காதல் கவியரசுப்பட்டம்...

1 comment:

  1. "காதல் கவியரசு" என்ற பெயர் T.R உண்டு என்பதை உங்களின் பதிவில்தான் தெரிந்துகொண்டேன். நன்றி நண்பரே.

    ReplyDelete