Wednesday 8 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

வாட்...? போர் தொடுப்பதா..! என்ன சொல்கிறீர்கள் ஹிஸ் ஹைனஸ்.!

யெஸ் போரே தான்..! அதுவும் இன்னும் 30 நிமிடங்களில்..

உலக வரை படத்தில் ஐரோப்பிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே சிறு புள்ளியாய் மறைந்துள்ள நாடு அது. உரையாடல் அந்நாட்டு அதிபருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்தது.. இனி.. தொடர்கிறது...

ஹிஸ் ஹைனஸ்.. அந்த புரட்சிப்படையில் அதிக பட்சம் 100 பேர் இருந்தாலே அதிகம்.. காதும் காதும் வைத்தாற்போல ஒரு ரகசிய ஆபரேஷனில் அனைவரையும் உயிருடன் பிடித்துவிடலாமே.. பகிரங்கமாக போர் எதற்கு.? அந்தளவு அவர்கள் பலம் வாய்ந்த படை இல்லையே.?

தெரியும் அமைச்சரே என் ஆட்சிக்கு எதிராக நாட்டின் தென்கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் 6 மாதத்தில் நாட்டின் மையப்பகுதிக்கு முன்னேறியிருக்கிறார்கள்.. அவர்களிடம் கையிலிருக்கும் ஆயுதங்கள் குறைவு ஆனால் மூளை அதிகம்..அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

முழு பலத்துடன் அவர்களை இப்போதே தாக்கி அழிக்காவிட்டால் நாளை நீங்களும் நானும் கொல்லப்படுவோம்.. செல்லுங்கள் அவர்களை பெரிய எதிரி போல கருதி வீழ்த்துங்கள் என்றார் அதிபர். அவரது சொல்லிலுள்ள உணமையை தெரிந்து கொண்ட அமைச்சர்  போரிட விரைந்தார்.

நீதி : முள்மரத்தை சிறு செடியிலேயே களைந்துவிட வேண்டும் அது வளர்ந்த பின் வெட்டுபவர் கையை நோகடிக்கும் அதே போல பகையையும் அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

No comments:

Post a Comment