Monday 13 July 2015

MSV

மனிதர்கள் உடலில் ஹார்மோன்கள் சுரந்தது இவரது உடலில் மட்டும் ஆர்மோனியம் சுரந்தது இவர் விரற்கட்டை பட்ட போதெல்லாம் ஸ்வரக்கட்டை சிலிர்த்தது நல்ல மெட்டுக்கட்டை அணிந்தது கண்ணதாசனின் பாட்டா விஸ்வநாதனின் மெட்டா எது சிறந்தது எனக் கேட்டா
எவரும் இங்கு பதில் சொல்ல மாட்டா..
நல்லிசை தந்த மெல்லிசையே நீ வல்லிசை தந்ததில்லை.. கவிஞர்களின் சொல்லிசையை ராமனின் வில்லிசை போல அதிர வைத்தாய்..  ஏனெனில் உன்னுடனும் இருந்தார் ஒரு இராமமூர்த்தி உங்கள் இசையால் கிடைத்தது பெரும் கீர்த்தி.. நீ ஒரு இசை விவசாயி உன் வயலினில் விளைந்தது எத்தனைப் பாட்டுப் பயிர்.. அதை கேட்டு மகிழ்ந்தது மக்களின் உயிர் இரட்டைக் குழலாய் இணைந்திருந்த போதும் தனித்து இருந்த போதும் நீ ஒரு துப்பாக்கி.. அது தோட்டாவை பொழியும் நீ பாட்டாகவே பொழிந்தாய்.. கண்ணதாசன், வாலி, செளந்தரராஜன், விஸ்வநாதன் இந்த நால்வர் தான் தமிழ் சினிமாவின் நான்மறை.. ஆனால் இந்த நால்வருமே மறைந்தது என்ன முறை.. மறைந்தது உங்கள் உயிர் தான் மெல்லிசைகளில் நீங்கள் வாழ்வீர்கள் இவ்வுலகம் உள்ள வரை..

கண்ணீருடன்..

ரசிகர்கள்.

1 comment: