Friday 10 July 2015

ஸ்வீட்ஸ்

New tweets

அன்று தொரட்டிக்குச்சியை கையில்பிடித்ததின் பரிணாம வளர்ச்சியே இன்றைய செல்ஃபி ஸ்டிக்.

இவன் 40,50 பெண்கள்கூட சாட் பண்ணிட்டு அந்த பொண்ணுக்கு 11 பேரான்னு கிண்டலடிக்குறான்.

மனிதனின் களவுள்ள நாக்கு பாம்பின் பிளவுள்ள நாக்கை விட கொடியது.

எல்லைகளை வகுத்துக்கொண்ட போதே பிரிவினைகள் தொடங்கிவிட்டன.

நீ ஃபீனிக்ஸ் பறவையாகவே இருந்தாலும் சோம்பேறியாய் இருந்தால் சாம்பலாகவே இருப்பாய்.

மனது வெள்ளையாக இருப்பதால் தான் சீக்கிரம் அழுக்காகி விடுகிறது.

சோகத்திற்கு வடிகால் என்பது ஆல்கஹால் எனத் தவறாகவே  புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

அதிர்ஷ்டமில்லாத மரங்கள் வெட்டி எறிந்து சிறு துண்டுகளான போதும் மீண்டும் சீவப்படுகிறது பென்சில்களாய்.

ஏன் சுவற்றோடு பேசுகிறாய் உன் சோகத்தை கடவுளிடம் போய் சொல்லி ஆறுதல் தேடு என்கிறார்கள் இரண்டும் ஒன்றுதான் எனத் தெரியாமல்.

கடமை என்பது நம் கண்ணுக்கு கொடுமையாகவே தெரியும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது.. "புரொஃபைல் பிக்சர்"

நம் சோகம் என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஆறுதல் கிடைக்காது.

என்ன தான் முகம் மூடி ஹெல்மெட் போட்டாலும் என்னவளை எளிதாக அடையாளம் காண முடிகிறது. பிரேக் போடும் போது 2 காலும் சாலையில்.!

நடுத்தர வயதில் ஆணின் சமாதானக் கொடி நரையாக மாறி காதோரங்களில் பறக்கும்.

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் "பாட்டாளிகள்" தானே!

காதலில் தோற்றவனுக்கு ரோஜாப்பூவும் நிலாவும்  கவிதையாகத் தெரியாது.

சரி சரி... லேட்டானாலும் பரவாயில்லை மெதுவாவே வாங்கன்னு மனைவி சொன்னால் அவங்க வீட்டில் இல்லை வெளியே போயிருக்காங்கன்னு அர்த்தம்.

காதலில் தோற்றவர்களின் சோகம் முன்பு பாட்டில் இருந்தது தற்போது பாட்டிலில் இருக்கிறது.

"உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்துச்சு"என்பது  நட்பே இல்லை.

ஆங்கிரி பேர்டு விளையாடும் குழந்தைகளிடமிருந்து மொபைலை பறித்தால் நிஜ ஆங்கிரிபேர்டாக மாறிவிடுகிறார்கள்.

மனிதன் பறக்க முடியவில்லையே என ஏங்குவதுபோல் ஓட முடியவில்லையே என பறவைகளும் ஏங்கலாம்.

மனைவியிடம் அனுமதி பெற்று பார்ட்டிக்கு செல்வதே நிபந்தனை ஜாமீன் ஆகும்.

போன்கள் எல்லாம்"ஸ்மார்ட் ஆனது மக்கள் மட்டும்"பிளாட் ஆகிவிட்டனர்.

நல்ல அன்பான குடும்பத் தலைவனாக நடிக்கத் தெரிந்தவருக்கு அது போல நடக்கத் தெரியாததே வாழ்க்கை எனப்படும்.

ஆக்ச்சுவலி குத்துசண்டை மல்யுத்த வீராங்கனைகளை மணந்தவர்கள் தானே மாவீரர்கள்!

ரெண்டே நிமிடத்தில் தயாராச்சு 20 கோடியில் அழிஞ்சுபோச்சு.

பேண்ட் போட்டு பெல்ட் போட்டா "ஸ்டைலிங்" ஜட்டி போட்டு பெல்ட் போட்டா "ரெஸ்லிங்"

மதுவின் தீமைகளை பற்றி நெடுநேரம் நண்பர் எடுத்துரைத்தார் உடனே நிறுத்திவிட்டேன்!

சூப்பர் அந்த பழக்கத்தையா.?

இல்லை..அவருடன் பேசுவதை..

இந்தியாவிலுள்ள ஆண் ஜென் துறவிகள் அனைவருக்கும் திருமணமம் ஆகிவிட்டது.

குடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்புபவனுக்காக வாசலிலேயே வெறியோடு காத்து நிற்கும் மனைவி...

 இதான் "தெய்வம் நின்று கொல்லுங்கறதோ"

No comments:

Post a Comment