Friday 17 July 2015

பிரியாணி குறள்கள்

#ரமலான்_குறள்கள்

தால்சா எலும்பு தயிர் வெங்காயம் இவை நான்கும்

இல்லா பிரியாணி இழுக்கு.

முகநக நட்பது நட்பன்று பிரியாணி தரும்

முகமது நட்பே நட்பு.

எலும்போடு கறியுள்ள பிரியாணி அதை

குழம்போடு உண்பது சிறப்பு.

பெருநாள் உணவாக பிரியாணி தருவோர்க்கு

பெருமை வாழ்வில் வரும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

ரம்ஜான் பிரியாணி தராதவர்க்கு.

No comments:

Post a Comment