Friday 3 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

சார் நம்ம நிறுவனத்து தயாரிப்புகளை கிண்டல் அடித்து நமக்கு மார்க்கெட் போட்டியான ஒரு நிறுவனம் விளம்பரம் எடுத்து இருக்காங்க.

ஓ.. அப்படியா அதுக்கு என்னா செய்யலாங்கறிங்க!

நாமும் பதிலுக்கு ஒரு விளம்பரம் எடுத்து அதுக்கு கவுன்ட்டர் கொடுக்கணும் சார்..

சரி அவங்க நம்ம தயாரிப்பு பத்தி கிண்டல் பண்ணதுல ஏதும் உண்மையிருக்கா?

95 சதவீதம் இல்ல சார்..

ஓ.. அப்ப 5சதவீதம் இருக்கு இல்லியா.. அந்த நிறுவனம் நமக்கு நல்லதை தான் செஞ்சிருக்காங்க.. அவங்க செலவு பண்ணி நம்ம குறையை சுட்டிக்காமிச்சு இருக்காங்க.. அவங்களுக்கு பதிலடி தர்றதுக்கு யோசிக்கிற நேரத்துல இந்தக் குறையை களையெடுக்க யோசியுங்க, அதுவே நமக்குப் போதும்.

அந்த முதலாளியின் இந்த பாசிட்டிவான பழி வாங்கும் குணமில்லாத அணுகுமுறை அடுத்த சில மாதங்களில் அவர்களது விற்பனையை பல மடங்காக்கியது.

நீதி: செல்வத்தை உயரிய வழியில் சேர்த்துக் கொண்டே இருப்பது தான் எதிரியின் கர்வத்தை அறுக்கும் கூரிய ஆயுதமாகும்.

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

No comments:

Post a Comment