Wednesday 18 February 2015

சிறு சிறு கதைகள்.

சின்னஞ்சிறு கதைக்கு  சமநிலைச் சமுதாயம் எனும் இதழில் வந்த இந்த கற்பனை உரையாடலை உதாரணமாக கூறுகிறார் சுஜாதா.!

தலைப்பு : கற்பனை உரையாடல்

"ஹலோ யாருங்க ஜார்ஜ் புஷ்ஷுங்களா.?" 

ஆமா என்ன விஷயம்.?

சதாம் உசேனோட கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஈராக் மக்களை விடுவிச்சதுக்கு பாராட்ட தாங்க போன் பண்ணினேன்"

"ரொம்ப நன்றிங்க"

வேற நாடுகளிலும் அப்படி கொடுமையான ஆட்சி நடந்தா அந்த மக்களையும் விடுவிப்பிங்களா.?

"நிச்சயமா!அதானே எங்க நாட்டோட கொள்கை"

ரொம்ப நன்றிங்க எங்க நாட்டுலயும் அப்படி ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்குதுங்க உங்க படையை அனுப்ப முடியுமா.?

"ஒன் மினிட்.. உங்க நாட்டுல பெட்ரோல் கிணறு இருக்குதா?"

"அதெல்லாம் இல்லிங்களே சார்"

அப்ப வைடா போனை.


#சுஜாதா_நினைவலைகள்

சின்னஞ்சிறுகதை... தலைப்பு : சந்திப்பு.

நீலாவை அங்கே சந்திப்பதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவளை அவன் கடைசியாக பார்த்தது போலவே அதே அழகு. அதே இளமை. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவளை மெல்ல அணுகி "ஹாய் நீலா.! என்னைத் தெரிகிறதா.? என்றான்.

ஒரு நிமிஷம் நெற்றியைச் சுருக்கி யோசித்தவள் தன் நினைவு செல்களை புதுப்பித்துக் கொண்டாள். சட்டென்று அவள் முகம் மலர்ந்தது "ஹாய், ராம் தானே நீ.? இங்கே எப்படி? என்றாள்.

ஒரு பஸ் விபத்து நாலு பேர் பலி.. அதுல நானும் ஒருத்தன்..!

ஸாரி ராம்..!

ஆமா.. நீ ஏன் தற்கொலை பண்ணிகிட்ட நீலா.?.



ஆலன் மெயர் எழுதிய சின்னஞ்சிறு கதை..

தமிழாக்கம் : எழுத்தாளர் சுஜாதா

தலைப்பு : துரதிர்ஷ்டம்.

உடம்பெல்லாம் வலியுடன் கண்விழித்தான். படுக்கையருகில் ஒரு நர்ஸ் நின்று கொண்டு இருந்தாள். "மிஸ்டர் ப்யூஜிமா.. நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரர் 2 நாட்களுக்கு முன்புதான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தது...

"நீங்கள் இந்த ஆஸ்பத்திரியில் இப்போது பத்திரமாக இருக்கிறீர்கள்" என்றாள். அவன் ஹீனஸ்வரத்தில் கேட்டான் "நான் எங்கே இருக்கிறேன்.?

"நாகசாகி"என்றாள்.


50வார்த்தைகளில் ஒரு கொலைக்கதை...

அருண் அழகானவன். ஜாலியாக நேரம் கழிப்பது அவனுக்குப் பிடிக்கும். நண்பன் விஜய் அவனுடன் வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஒருநாள் அருண் கொஞ்சம் குடித்திருந்தான். விஜய் ஒரு பந்தயம் வைத்தான்."50 வார்த்தைகளுக்குள் ஒரு கொலைக்கதையா? உன்னால் எழுதமுடியாது அருண், நீ வளவளா ஆசாமி" என்றான். "முடியுமே"  என்றான் அருண். எப்படி? அருண் அலமாரியிலிருந்து துப்பாக்கியை எடுத்து சிரித்துக் கொண்டே விஜய்யை சுட்டுக் கொன்றான்.

#எழுத்தாளர்_சுஜாதா 

#சுஜாதாவின்_போஸ்ட்கார்டு_கதைகள்

தலைப்பு : பொது வாழ்வு.

"இன்றிரவு 8மணிக்கு ஷெரட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்டர்" மனைவி வருவதை கவனித்து சட்டென்று அந்த துண்டுச்சீட்டை கிழித்து குப்பையில் போட்டான். 

என்னங்க அது.? 

ஒண்ணுமில்லை இரவு ஒரு மீட்டிங் அதுக்கு தான் சீட்டனுப்பி கூப்பிட்டிருக்காங்க போகணும்.

இன்னைக்குமா? "தினமும் இப்படி மீட்டிங் வந்துடுதே உங்களுக்கு" 

"என்னம்மா பண்றது.. பொது வாழ்வுன்னா அப்படித்தான்"

"முந்தாநாள் வனவிலங்கு பாதுகாப்பு பத்தி மீட்டிங்னீங்க", நேத்து குடும்பக் கட்டுபாடுன்னீங்க.. இன்னிக்கு.?

"எய்ட்ஸ் விழிப்புணர்வு"
-----------------------------------------------------------------------------------------
போஸ்ட் கார்டு கதைகள் அதிக பட்சம் 55 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் கதை எழுத ஒரு போஸ்ட் கார்டு போதும் என்பதால் இப்பெயர் - எழுத்தாளர் சுஜாதா

1 comment:

  1. Thanks for rejuvenating me with Sujatha! What a wizard! Thanks a lot again
    Vishwanath

    ReplyDelete