Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 4

#லவ்லி_லாகோஸ்

PART - 4

சிவா சார் வீட்டில் அன்றொரு நாள் பேசிவிட்டு...  உப்புமா சாப்பிட்டு விட்டு கிளம்பிய தினம்.. கிளம்பும் போதே இரவு 12:30 மணி.! நைஜீரிய இரவு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கமல்நாத் சாரிடம் சொன்னோம். கார் நேராக எங்கள் ஹோட்டலுக்குச் சென்றது... அறைக்குப் போய் குளித்து ஆடை மாற்றி கிளம்பினோம்.

இரவில் நைஜீரிய டிராபிக் என்பது சுத்தமாக இல்லை கேங்ஸ்டர்களை நினைத்தோ அல்லது துணிவு இன்றியோ பலர் அடைந்து கிடந்தனர்.. மூலைக்கு மூலை நைஜீரிய காவல் துறையினர் நம்ம ஊரு போலீஸ் எல்லாம் கடவுள்கள்... ஆனால் அங்கு அநியாயமாக வண்டியை நிறுத்தி அசால்ட்டாக லஞ்சம் கேட்டார்கள்.. அதைக் கொடுத்தோம்..

ஏதோ சுண்டல் வாங்குவது போல வாங்கிக் கொண்டார்கள்,மறைப்பது, நைசாக பாக்கெட்டில் வைப்பது, ஏட்டையாவை விட்டு வாங்கச் சொல்வது, என்றில்லாமல் ஏ.சி யே வாங்கிக் கொண்டு இருந்தார்.. எங்கும் இருள்.. பவர் கட்டினால்... ATM இயந்திரங்கள் இருக்கும் இடத்தில் மட்டும் ஒளியிருந்தது.. ஆனால் இங்கும் பெரிய சிக்கல்..!

ஆம்.. இந்தATM அருகில்தான் தாக்கும் நைஜீரியர்கள்  பதுங்கி இருப்பார்கள்.. இரவு நேரத்தில் பணம் எடுப்போரைத் தாக்க... கமல் சார் பாதுகாப்பான  இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தினார்.. அங்கு பணம் எடுக்க முடியவில்லை.. கடைசியில் பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் நின்று தான் பணம் எடுத்தார்..  திக் திக் நிமிடங்கள் அவை..!

அவர் பணம் எடுத்துவரும் வரை என் உயிர் என்னிடம் இல்லை.. கிறிஸ்டோபரைப் பார்த்தேன்.... அவர் உறங்கிவிட்டார்.. எங்களுக்குக்  காவல் இப்போது டிரைவர் ஜும்போ மட்டுமே.. ஒரு வழியாக கமல் சார் வண்டி ஏறியதும் தான் உயிர் வந்தது.. எங்கள் வண்டி புகழ் பெற்ற நைஜீரிய இரவு கிளப்புகள் இருக்கும் இடத்தில் நுழைந்தது.

அந்தச் சாலையின்  வாயிலிலேயே மீண்டும் நைஜீரிய போலீஸ்... பொதுவாக இந்தியர்களை மாஸ்டர் என்றும் வயதானவர்களை பாபா என்றும் அழைக்கும் நைஜீரியர்கள்.. தேவையான பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.. இரவு கிளப் ஒன்றின் வாசலில் எங்கள் வண்டி நின்றதும் அந்தக் கிளப்பில் இருந்து ஒரு ராட்சசர் வந்தார்..!

கிட்டத்தட்ட7 அடி உயரம் அர்னால்டு பாடி..  கருப்பு ஸ்கின் டைட் உடை... எங்களை கைகளால் ஸ்கேன் செய்தார்.... பிறகு திருப்தி வந்ததும் அனுமதித்தார்... ஒரு வழியாக உள்ளே சென்றோம்.. திடுக்கிட்டு நின்றோம்.. அங்கே ஆப்பிரிக்காவின் வறுமையைக் கண்டோம்.. அந்த கிளப்பில் எந்தப் பெண்ணுக்குமே ஆடைகள் இல்லை.. அவ்வளவு கொடூர வறுமை... பாவம்..

இங்குதான் ஒரு ஆச்சரியமும் நடந்தது! அந்தப் பெண்கள் அனைவரும் ஒரு கம்பிக்குப் பின் நின்று தங்கள் அங்கங்களை மறைக்கப் பார்த்தனர் அது முடியாத வேதனையில் நம் டேபிளுக்கே வந்து ஆடினர்.. ஒரு லெமன் ஜுசைக் குடித்துக் கொண்டே நடப்பதை கவனித்தேன்.. அங்கு நான் பார்த்த ஒரு திடுக்கிடும் சம்பவம்..... அதுபற்றி நாளை..

No comments:

Post a Comment