Thursday, 28 November 2013
கலைவாணர் N.S.கிருஷ்ணன்....
Friday, 22 November 2013
ராஜபக்ஷேவிடம் விசாரணை....
Thursday, 21 November 2013
அட்டாக் பன்ச்..
ஜன"வரி" என்பது மக்கள் கட்டும் வரி அல்ல..
பிப்ர"வரி"என்பது ஒரு கோடு அல்ல...
ஐஸ் (eyes) இடம் இருப்பதாலேயே அது கூலிங்கிளாஸ்...
லத்தி சார்ஜ்ஜுக்கு கரண்ட் தேவையில்லை...
புத்த"கம் என்பது புத்தர் ஒட்டும் பசையல்ல...
பென் டார்ச் என்பது பெண்ணை டார்ச்சர் செய்வதல்ல...
பிராய்லர் கோழி என்பது உள்ளாடை அணிந்த கோழியல்ல...
குரோம்பேட்டை என்பது காக்கா வசிக்கும் பேட்டையல்ல....
அடையாறு என்பது 6 அடைகளை குறிக்காது...
பூந்தமல்லி என்பது எதற்குள்ளும் நுழையாது...
டேபிள் மேட் என்பது மேஜைப் பைத்தியமல்ல...
சீலிங்ஃபேன் என்பது சீல் வைக்கப்பட்ட ஃபேன் அல்ல...
சேத்துப்பட்டு என்பது சகதியில் உள்ள பட்டல்ல...
எலிபெண்ட் என்பது எலி போடும் பேண்ட் அல்ல...
பாமரேனியன் என்பது பாமரமான நாய் அல்ல...
மலை போல் விபூதி கொட்டியிருப்பது திருநீர்மலையல்ல...
தாண்டிக்குடி என்பது குடித்துவிடு தாண்டுவதில்லை...
முக்கொம்பு என்பது 3 கொம்பு உள்ள மிருகமல்ல...
பெரம்பலூர் என்பது பிரம்பு விளையும் ஊர் அல்ல...
டோர் டெலிவரி என்பது கதவின் பிரசவம் அல்ல...
கோக்கனட் என்றால் கோக்கை நட்டு வைப்பதல்ல...
வால்நட் என்பது சுவற்றில் நட்டு மாட்டுவது அல்ல...
கிரவுண்ட்நட் என்பது மைதானத்திலுள்ள நட்டு அல்ல...
சிக்னெட் என்பது நோய் வந்த நட்டு அல்ல...
கேஷ்யூநட் என்பது பணத்தை நட்டு வைப்பதல்ல...
சாக்கர் என்றால் சாக்கு விற்பவர் அல்ல...
கிக்கர் என்றால் போதைக்காரர் அல்ல...
லாக்கர் என்றால் பூட்டு விற்பவரில்லை...
வாக்கர் என்றால் ஓட்டு போடுபவரில்லை...
மார்க்கர் என்றால் மார்க் போடுபவரில்லை...
----------------------------------------
திருக்குறளை நாம் எழுதினால் யாரும் நம்மை திருவள்ளுவர் என சொல்ல மாட்டார்கள்......
எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் நிழலுக்கு அடி படாது...
செல்போனில் எவ்வளவு ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் சார்ஜ் இல்லாவிட்டால் பேச முடியாது....
ஒரு விரலால் வணக்கம் சொல்ல முடியாது....
சோபா மேல் அமர்வது போல் அதற்கு அடியில் உட்கார முடியாது....
போதை ஏற ஏணி தேவைப்படாது...
கிணற்றில் விழுந்த வழியாகத்தான் மேலேற முடியும்...
மின்சாரம் இல்லாவிட்டாலும் சுவிட்ச் போட முடியும்...
முகக் கண்ணாடிக்கு பின்னால் நின்றால் அது முகம் காட்டாது....
லிப்ஸ்டிக்கை எழுதவும் பயன் படுத்தலாம்...
கடுகு உளுத்தம்பருப்பை தாளித்து அல்வாவில் போடக் கூடாது...
எவரெஸ்ட் மலையில் எறும்புகளும் ஏறும்....
கப்பலே என்றாலும் ஓட்டை விழுந்தால் கடலில் மூழ்கிவிடும்..
கிராமத்தில் வாழும் ஆமை நாட்டாமை......
நடுக்கடலில் நரிகள் வாழாது....
புலிக்கு பைக் ஓட்டத் தெரியாது...
காட்டுக்குள் சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதை யாரும் சிவாஜி என்று அழைப்பதில்லை ..
யானையை போல பெரிய மிருகம் இன்னொரு யானையே....
முள்ளம்பன்றி காலிலும் முள் குத்தாலம்....
பாம்பு தன் சட்டையை கழற்ற காரணம் அதுக்கு வேர்த்து கொட்டுவதால் கூட இருக்கலாம்...
கிளிக்கு பேச தெரிந்தாலும் அது இன்னொரு கிளியிடம் "க்கீ" என்றே பேசும்....
ஒற்றை பனைமரத்துக்கு பின்னால் ஒட்டகச்சிவிங்கியை ஒளித்து வைக்க முடியாது....
ஓட்டகத்தால் மல்லாக்க படுக்க முடியாது...
பவுடர் அடித்தாலும் பன்றி பன்றி போலவே இருக்கும்....
கரப்பான் பூச்சி மீசையை ட்ரிம் செய்யாது...
எத்தனை கலர் மாறினாலும் ஒரு கலர் பெயர்கூட பச்சோந்திக்கு தெரியாது....
Wednesday, 20 November 2013
செல்லியல் இணையத்தில் வதந்"தீ"
Saturday, 16 November 2013
Monday, 11 November 2013
மணிவண்ணனுக்கு......
வறட்சி......
வாலிக்கு.....
இளையராஜாவுக்கு....
வெங்கியின் புலம்பல்கள்.....
தீனா கொரலு
Sunday, 10 November 2013
பலகார அரசியல்........
அரசியல் வெடி.....
உழைப்பாளிகளின் ஸ்டேட்டஸ்....
இவங்க ஸ்டேட்டஸ் போட்டால் இப்பிடித் தான் இருக்கும்....
போலீஸ் கார்: தினமும் "மாமூலா" நடக்குற விஷயம் தான்.. இருந்தாலும் பயந்து பயந்து செய்ய வேண்டியிருக்கு... feeling scared...
டாக்டர்: எங்க கையெழுத்து புரிஞ்சா உங்க தலையெழுத்து புரிஞ்சிடும்.... அவ்வ்வ்வ்....
வக்கீல்: சமையலறையில "கேஸ்" தீர்ந்திடும் சட்ட அறையில "கேஸ்" தீராது... யாரு கிட்ட.....
இன்ஜினியர்: நாங்க கட்டின வீடும் சரியில்லை.. வீட்டுல எங்களுக்கு கட்டினதும் சரியில்லை ...மிடில....
ஆட்டோக்காரர்: துணி வாங்குறப்ப மீட்டர் எவ்வளவுன்னு கவலைப்பட மாட்டீங்க... ஆட்டோவுல மட்டும் மீட்டர் எவ்வளவுன்னு பார்க்குறிங்க என்னா நியாயம் சார் இது..
feeling sad.....
டெய்லர் : டாக்டர் வெட்டி தைச்சா அது ஆபரேஷன்.. நாங்க வெட்டி தைச்சா அது பேஷன்....... எப்பூடி......
டீ மாஸ்டர் : ஃபேஸ்புக் யூஸரும் டீக்கடை மாஸ்டரும் ஒண்ணு... ஏன்னா நாங்க இரண்டு பேரும் தான் கழுவி கழுவி ஊத்துவோம்... ஹி..ஹி.ஹி
சமையல்காரர் : சமையலில் மணம் இருந்தா "மல்லி" காரணம்... பொணம் விழுந்தா"பல்லி" காரணம்....
Be carefull.. நான் என்னை சொன்னேன்.....
ஆசிரியர் : யார் எழுதுனாலும் நான் தான் மார்க் போடுவேன் ஆனா ஃபேஸ்புக்கில் எல்லோரையும் மார்க் தான் போட்டு தள்ளுறான்..... தாங்கலைடா சாமி.....
மிருகங்களின் ஃபேஸ்புக்.......
தலைவர்களும்... திரைப்படங்களும்....
விடையில்லா கேள்வி.....
Saturday, 9 November 2013
பாட்டி சொல்லாத கதை...
பாட்டி.... ஒரு ஞாபகம் ...
என் அம்மாவின் அம்மா ருக்மணி என்கிற ருக்கு பாட்டி..
பிராமணர் சமூகத்தின் பிரஜை... கலப்பு மணம் புரிந்த என் தாய்க்கு முதல் மகன் அவளுக்கு நான் முதல் பேரன் என்ற வகையில் நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல் ...13 வயதில் திருமணம் ..13 பிள்ளைகள்..
மூத்தவர் என் அம்மா...3 பிள்ளைகள் இறந்து விட்ட போதிலும் 10 பிள்ளைகளை வளர்த்தவர் ..அதிலும் 2 பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டு இறந்த போதிலும் கலங்காத மனம் கொண்டவள்..
நாராயணஐயர் என்கிற என் தாத்தாவின் சக தர்மிணி..எனக்கு 5வயது ஆகும் போதே இறந்து விட்டார் தாத்தா..அதற்கு பின் என் 25வது வயதில் தான் பாட்டியை இழந்தேன். இரண்டு சிறுநீரகமும் பழுதாகி இறந்தவள் பாட்டி...
அழகாக கதை சொல்லுவாள், இனிமையாக பாடுவாள், ஸ்லோகங்கள் சொல்லித் தருவாள் என் மிமிக்ரி திறமை பாட்டியின் ஜீனில் இருந்தே வந்தது என்பதை அவள் பி.எஸ். வீரப்பா குரலில் பேசிய போது தெரிந்து கொண்டேன்..
என்னேரமும் ஆசாரம் மடி என தொட்டு பார்த்ததில்லை என் பாட்டியை..ஆனால் கடங்காரா கால் அமுக்குடா என்று அவள் அனுமதித்த வேளை என் வாழ்வில் வசந்தம்..10 வயதில் தாயை இழந்தவன் நான் என் பாட்டியின் கால் தொடும் போதெல்லாம் என் அம்மாவை ஸ்பரிசித்தது போல் ஒருணர்வு...
ஆம் எனக்கு தாயாகவும் இருந்தவள் பாட்டி.... கல் சட்டியில் பழைய சாதமும் தயிரும் இட்டு 4வகை ஊறுகாயுடன் அவள் உருட்டி தந்த உணவு இந்த உலக உருண்டையில் எங்கும் கிடைக்காது...
கண்டிப்பு ஆசாரம் இவையே அவள் வகுத்து கொண்ட எல்லைகள்.. பாட்டி ரசம் வைத்தாள் என்றால் அதில் விசம் வைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன் அந்தளவிற்கு அதன் ரசிகன் நான்..ஒரு வத்தகுழம்பு சுட்ட அப்பளம் வைத்தாலும் அது ராஜ உணவாக இருக்கும் கை மணம் அவளின் தனி சிறப்பு..
வெறும் ஊறுகாய் தயாரித்தே 18 வருடங்கள் குடும்ப பொருளாதாரத்தை கட்டி காத்தவள்.. இசைப்பிரியை.. எந்நேரமும் ஏதாவது பாடலை முணுமுணுத்து கொண்டிருப்பாள்..எந்த ராகம் என்ன தாளம் என்று மிகச்சரியாக சொல்லிவிடுவாள்..
நீ பெரிய நடிகனாக வருவே என்று என்னை அடிக்கடி சொல்லுவாள்.. எப்படி பாட்டி என்பேன் இவ்வளவு பொய் சொல்றியேடா உனக்கு கற்பனை அதிகம் அதுனால தான் என்பாள்.. இன்றளவிற்கும் இது பெரிய சைக்காலஜி ..மிகச்சரியாக தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் கணித்தவள்...
பாத்திரம் உருளும் சத்தத்திலேயே வெங்கடேசா என்ன பண்றே.. பாலு..கடங்காரா.. உமா வாடி இங்கே.. சுந்தர்ராஜு ஏண்டா கண்ணு..என யார் செய்திருப்பார்கள் என உள் அறையில் இருந்தே கண்டு பிடித்து சொல்வாள்..
ஸ்காட்லாண்ட்யார்டில் வேலை பார்க்கும் திறமைக்கு கொஞ்சமும் குறையாதது அவள் கணிப்பு.ருக்கு பாட்டி மக்கு பாட்டி...என்று நாங்கள் கத்திவிட்டு ஒடுவதையும் கடங்காரன் எப்படி கத்துறான் பாரு என்று ரசிப்பாள்..
வெகு நாட்கள் சந்தேகம் ஏன் இவள் கடன் காரா என்றே திட்டுகிறாள் வேறு வார்த்தையே சொன்னதில்லை என்று போன வருடம் என் மாமா சொன்னார் தாத்தா வாங்கிய கடனை பிள்ளைகள் மேல் போடாமல் ஒற்றை ஆளாய் நின்று அதை தீர்த்தார் என்று..
அதனால் தான் துன்பம் தரும் போதெல்லாம் எங்களை கடங்காரா என்று அழைத்தார் என அறிந்தபோது அழுது விட்டேன்..
ஆசாரமான குடும்பம் 48 வயதில் விதவை ... ஏராளமான கடன் .. 10 பிள்ளைகள் ... முதல் மகளின் கலப்பு திருமணம்..வறுமை ... தன்மானம்...சிறுனீரக பழுது... இவை அனைத்தையும் சர்வ சாதாரணமாக கடந்தவள் என் பாட்டி...
என் பேரை உங்க பிள்ளைகளுக்கு வைக்காதிங்கடா...என்று சத்தியம் வாங்காத குறையோடு சொல்லி இறந்து போனாள்..
அவள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாதாம்...இரு கிட்னிகளும் பாதிக்கப்ப ட்டு டயாலிசிஸ் அவஸ்தியில் படுத்து இருக்கும் போது ஒரு நாள் அவளை பார்க்க போனேன் வெங்கடேசா.. சட்னி ஊசி போச்சுனா சாப்பிட முடியாது கிட்னி ஊசி போச்சுனா வாழ்ந்திட முடியாதுன்னு விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டே சொன்னார்... அதற்கு அடுத்த வாரம் இறந்து போனாள் இரும்பு மனுஷி என்ற பட்டத்துக்கு சொந்தமான என் பாட்டி..
எனக்கு நிறைவேறாத ஒரு ஆசை உயிருடன் நீ இருக்கும் போது சொல்ல மறந்ததை இப்போது சொல்கிறேன்.... ஐ... லவ்.. யூ... பாட்டி....
கண்ணீருடன்... வெங்கடேஷ்,பாலு, உமா&குமரன்......பேரன் பேத்திகள்..........
தலைவர்களுக்கு தந்தி
விஜயகாந்த் - பாரதிராஜா
கப்ஸா செய்திகள்.....
பாரதிராஜா - விஜயகாந்த் சந்திப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தனிமை தேடிய கேப்டனுக்கு அன்னக்கொடி ஓடும் தியேட்டர்களில் அது கிடைப்பதாக தெரிந்து அங்கு வந்தார்.. எங்கு குறட்டை.. சாரி...கோட்டை விட்டோம் என்பதை பார்ப்பதற்காக பாரதியும் அங்கு வந்தார்...
இது வரை ஒருவர் கூட வராத படத்திற்கு இருவர் வந்தது தியேட்டர் முதலாளியை மகிழ்ச்சி கண்மாயில் ஆழ்த்தியது. நமக்கு நேரம் சரியில்லை என்று இருவரும் ஒரே நேரத்தில் நினைத்து கொண்டார்கள்....
எப்படி இருக்கீங்க என்று பாரதியிடம் கேப்டன் கேட்க ....யா.. ஐயாம் பைன் பட்.. சபரிங் த மூவி ரிசல்ட்ஸ்.. நானும் எலக்ஷன் ரிசல்ட்ல தவசிங் (சபரிங்ல சபரி வர்றதால கேப்டனும் வேற படம் சொல்றார் என பொருள்)
யா..ஐ நோ.. பட் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு டிபரண்ட் உங்க ஆளுங்க வெளியே போய் டேமேஜ் பண்ணாங்க.. எங்க ஆளுங்க கூட இருந்தே டேமேஜ் பண்ணிட்டாங்க.. யெஸ் திஸ் இஸ் பியூர் பாலிடிக்ஸ்...
விடுங்க.. உங்களுக்கு அன்னகொடி கிழிஞ்சது எனக்கு கட்சி கொடி கிழிஞ்சது... சரி தமிளர்களை விட்டுடுங்க விஜயகாந்த் அப்படின்னு ஏன் சொன்னீங்க?
ஆக்சுவலி நான் சொன்ன மீனிங்...
நிறுத்துங்க...... முதல்ல நீங்க தமிள்ள பேசுங்க பாரதி...
யா ஐ.. வில் ட்ரை பட் யு குட் நாட் அண்டர்ஸ்டாண்ட் மை பிராபளம்...
(கேப்.சிரித்து) வெக்கமில்லாம என்னை சொல்லிட்டு... தமிளெ வரல... நீங்க தான் தமிள காப்பாத்த போறீங்களா...
ok நவ் ஐ ஸ்பீக் டமில் ஆக்சுவலி
விடுங்க பாரதி உங்களால முடியாது....
யூ ஆர் அதாவது நீங்க பாலிடிக்ஸ்ல பியூப்புள்ஸ எண்டெர்டெயின் பண்றீங்க ..சோ.. தியேட்டர்ஸ்க்கு பியூப்புள்ஸ் எப்படி வருவாங்க..
ஓ... நீங்க ஒளுங்கா எடுக்கமாட்டீங்க பளிய எங்க மேல போடுறிங்க.. சரி அப்ப ஏன் தமிள்செல்வன் படத்தை என்னை வச்சு எடுத்தீங்க?
யா.. ஐ.. டிட்.. கிரேட் மிஸ்டேக் பேசிக்கலி...
இருங்க பாரதி.. இந்த பேசிக்கலி பெருச்சாளி இதெல்லாம் வேணாம் நான் சொல்றேன் அன்னைக்கு நான் மார்கெட் வேல்யூ ஹீரோ அதான் எடுத்தீங்க இப்ப தமிள் தமிளர்னு உளர்றீங்க...
பட் ஒன் திங்க் ஐயாம் வில்லேஜ். பெல்லோ....
வில்லேஜா அது உங்க படத்துலதான் இருக்கு பேச்சுல எங்க இருக்கு.....
என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.. ஒகே திஸ் இஸ் இனப் பார் யூ.....
இந்த ரெக்கார்டு தான் 30 வருசமா ஓடுதே...இதை. தவிர நீங்க தமிள் பேசி ஒரு பய பார்த்ததில்ல...
ஓகே லீவ் இட் ஐயாம் சாரி அதாவது மன்னிச்சுடுங்க
கேப்டன்... ஏய்ய்ய்ய்ய்ய் மன்னிப்பா..... தமிள்ள எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...
கொந்தளித்த கேப்டனை தியேட்டர் முதலாளி சாந்த படுத்த பாரதியை மற்றவர்கள் அழைத்து செல்ல....
நன்றி. வில் மீட் யூ அகெய்ன் ..
கப்ஸா செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
ஊத்தவராயன்.....
பிரதமர் அம்மா.....
அம்மாவை பிரதமர் ஆக்க புறப்பட்டு விட்டேன்.... பரிதி....
இனி இதுக்கு போட்டியா என்ன கூற(வ)லாம் நமது யோசனை அம்மாவின் விசுவாசிகளுக்கு....
அம்மா தான் பிரதமர் என்று எனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும்... மதுரை ஆதீனம்.....!
இந்திராகாந்தி காலத்தில் அரசியலில் இருந்திருந்தால் நாட்டின் முதல் பெண் பிரதமர் அம்மா தான்.... ஓ.பி.எஸ்.
சிவப்பு சிந்தனை கொண்ட சிவந்த பெண் பிரதமர் (சிவப்பா இருந்தா பொய் சொல்லமாட்டாங்க ) அம்மா தான்.... தா.பாண்டியன்....
தான் எப்ப பிரதமர் ஆகணும்னு அம்மாவுக்கே தெரியும்... வளர்மதி....
பிரதமர் பதவி, ஜனாதிபதி பதவி இரண்டையும் ஒரே நேரத்தில் வகிக்கும் திறமை அம்மா ஒருவருக்கு தான்...(என்ன கொடுமை). நாஞ்சில் சம்பத்...
அம்மா பிரதமர் ஆகிவிடும் நாள் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர நாள்....சரத்குமார்...
ரியல் கேப்டன் பிரதமர் அம்மா தான்..... தே.மு.தி.க.அதிருப்தி எம்.எல்.ஏக்கள்...
பாராளுமன்றம் என்ற கோவிலில் குடியிருக்கும் தெய்வம்......புரட்சி தலைவி பிரதமர் அம்மாதான்.... மைத்ரேயன்.....