ஜன"வரி" என்பது மக்கள் கட்டும் வரி அல்ல..
பிப்ர"வரி"என்பது ஒரு கோடு அல்ல...
ஐஸ் (eyes) இடம் இருப்பதாலேயே அது கூலிங்கிளாஸ்...
லத்தி சார்ஜ்ஜுக்கு கரண்ட் தேவையில்லை...
புத்த"கம் என்பது புத்தர் ஒட்டும் பசையல்ல...
பென் டார்ச் என்பது பெண்ணை டார்ச்சர் செய்வதல்ல...
பிராய்லர் கோழி என்பது உள்ளாடை அணிந்த கோழியல்ல...
குரோம்பேட்டை என்பது காக்கா வசிக்கும் பேட்டையல்ல....
அடையாறு என்பது 6 அடைகளை குறிக்காது...
பூந்தமல்லி என்பது எதற்குள்ளும் நுழையாது...
டேபிள் மேட் என்பது மேஜைப் பைத்தியமல்ல...
சீலிங்ஃபேன் என்பது சீல் வைக்கப்பட்ட ஃபேன் அல்ல...
சேத்துப்பட்டு என்பது சகதியில் உள்ள பட்டல்ல...
எலிபெண்ட் என்பது எலி போடும் பேண்ட் அல்ல...
பாமரேனியன் என்பது பாமரமான நாய் அல்ல...
மலை போல் விபூதி கொட்டியிருப்பது திருநீர்மலையல்ல...
தாண்டிக்குடி என்பது குடித்துவிடு தாண்டுவதில்லை...
முக்கொம்பு என்பது 3 கொம்பு உள்ள மிருகமல்ல...
பெரம்பலூர் என்பது பிரம்பு விளையும் ஊர் அல்ல...
டோர் டெலிவரி என்பது கதவின் பிரசவம் அல்ல...
கோக்கனட் என்றால் கோக்கை நட்டு வைப்பதல்ல...
வால்நட் என்பது சுவற்றில் நட்டு மாட்டுவது அல்ல...
கிரவுண்ட்நட் என்பது மைதானத்திலுள்ள நட்டு அல்ல...
சிக்னெட் என்பது நோய் வந்த நட்டு அல்ல...
கேஷ்யூநட் என்பது பணத்தை நட்டு வைப்பதல்ல...
சாக்கர் என்றால் சாக்கு விற்பவர் அல்ல...
கிக்கர் என்றால் போதைக்காரர் அல்ல...
லாக்கர் என்றால் பூட்டு விற்பவரில்லை...
வாக்கர் என்றால் ஓட்டு போடுபவரில்லை...
மார்க்கர் என்றால் மார்க் போடுபவரில்லை...
----------------------------------------
திருக்குறளை நாம் எழுதினால் யாரும் நம்மை திருவள்ளுவர் என சொல்ல மாட்டார்கள்......
எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் நிழலுக்கு அடி படாது...
செல்போனில் எவ்வளவு ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் சார்ஜ் இல்லாவிட்டால் பேச முடியாது....
ஒரு விரலால் வணக்கம் சொல்ல முடியாது....
சோபா மேல் அமர்வது போல் அதற்கு அடியில் உட்கார முடியாது....
போதை ஏற ஏணி தேவைப்படாது...
கிணற்றில் விழுந்த வழியாகத்தான் மேலேற முடியும்...
மின்சாரம் இல்லாவிட்டாலும் சுவிட்ச் போட முடியும்...
முகக் கண்ணாடிக்கு பின்னால் நின்றால் அது முகம் காட்டாது....
லிப்ஸ்டிக்கை எழுதவும் பயன் படுத்தலாம்...
கடுகு உளுத்தம்பருப்பை தாளித்து அல்வாவில் போடக் கூடாது...
எவரெஸ்ட் மலையில் எறும்புகளும் ஏறும்....
கப்பலே என்றாலும் ஓட்டை விழுந்தால் கடலில் மூழ்கிவிடும்..
கிராமத்தில் வாழும் ஆமை நாட்டாமை......
நடுக்கடலில் நரிகள் வாழாது....
புலிக்கு பைக் ஓட்டத் தெரியாது...
காட்டுக்குள் சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதை யாரும் சிவாஜி என்று அழைப்பதில்லை ..
யானையை போல பெரிய மிருகம் இன்னொரு யானையே....
முள்ளம்பன்றி காலிலும் முள் குத்தாலம்....
பாம்பு தன் சட்டையை கழற்ற காரணம் அதுக்கு வேர்த்து கொட்டுவதால் கூட இருக்கலாம்...
கிளிக்கு பேச தெரிந்தாலும் அது இன்னொரு கிளியிடம் "க்கீ" என்றே பேசும்....
ஒற்றை பனைமரத்துக்கு பின்னால் ஒட்டகச்சிவிங்கியை ஒளித்து வைக்க முடியாது....
ஓட்டகத்தால் மல்லாக்க படுக்க முடியாது...
பவுடர் அடித்தாலும் பன்றி பன்றி போலவே இருக்கும்....
கரப்பான் பூச்சி மீசையை ட்ரிம் செய்யாது...
எத்தனை கலர் மாறினாலும் ஒரு கலர் பெயர்கூட பச்சோந்திக்கு தெரியாது....
No comments:
Post a Comment