ஒரு விவசாயியின் குமுறல்.......
காத்தில்ல மழயில்ல கால் வவுத்து கஞ்சியில்ல
வடக்கால அடிச்ச மழ தெக்கால அடிக்கவில்ல
வடக்கு நனஞ்சுடுச்சு தெக்கு காஞ்சிடிச்சு...
ஆத்துல தண்ணியில்ல அள்ளி திங்க அங்க மண்ணுமில்ல
பசிச்ச வவுத்துக்கு பசி மறந்து போச்சு
மழத்தண்ணி நெலம் பாத்து பல வருசம் ஆச்சு....
வெலவாசி அது ஏறி விண்ணுக்கு போச்சு
வெசம் வாங்க வழியில்ல வெசனமா போச்சு
குடிக்கிற தண்ணிக்கும் வெல வச்சாச்சு
வெவசாயி பொழப்புக்கு உல வெச்சாச்சு.....
நாங்க ஊரு திங்க உழச்ச கூட்டம் இன்னக்கி
ஒரு வா சோத்துக்கு திண்டாட்டம் ....
ஆட்சியில இருப்பவங்க யார நாங்க குத்தம் சொல்ல
ஆரு வந்து ஆண்டாலும் எங்க வாழ்க்கையில உச்சமில்ல...
சாமிய தேடி போன சனம் சாமிகிட்டயே போன மாதிரி ........
ஆண்டவனே கும்பிடுறோம்........
அள்ளிகிட்டு போயிடய்யா....
No comments:
Post a Comment