கப்ஸா செய்திகள் ....
வை.கோ-விஜயகாந்த் சந்திப்பு ....
ரிஷிவந்தியம் : நேற்று வீட்டுக்கு போவதாக நினைத்து கொண்டு தவறி தன் தொகுதிக்கே போய் விட்டார் கேப்டன்... பா (போ)தை மாறி வந்ததாக டிரைவர் சொன்னதும் அவர் முகத்தில் அன்பாக கை வீசி இவன் உளறுறான்.... (அவனுமா!)
நான் தொகுதி மக்களை பாக்க வந்தேன் என சமாளித்தார் வேற தொகுதி போகம கரக்டா சொந்த தொகுதிகுள்ள வந்தாரே என்ற அல்ப சந்தோஷ பட்ட மக்கள் கேப்டனை வரவேற்றார்கள்.... அப்போது நிறைய பேர் ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து அங்கு வர....
ஓ.! ஏரியாவுல பொங்கல் விழாவா? நடைபோட்டி நடக்குது போலனு நெனச்சு பாக்கெட்டில் இருந்து கேப்டன் ரூபாய எடுத்து பெரியவரே இத வாங்கிகோங்க என்றார். பதிலுக்கு அவர் என்னை தெரியலயா கேப்டன் என கேட்க....
கண்ணை உருட்டி உற்று பார்த்தவர் நீங்க மைக்கேல் ராயப்பன் தானே என்று பல்லை கடிக்க விபரீதம் உணர்ந்த அவர் தலைபாகையை கழட்ட அட நம்ம வை.கோ.....!!!!!!
மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காத நம்ம கேப்டன் தனது செயலுக்கு sorry கேட்டார். கட்சி எப்படி போகுது என்று கேட்ட வை.கோ வை கண் சிவக்க பார்த்து என் கண்ட்ரோல்ல இல்லாமல் போகுதுன்னு கண்ணாலயே கேப்டன் சொல்லிவிட்டு.....
நீங்க எப்படி இங்க என்று வாயால் கேட்டாரு. நடை பயிற்சி அடுத்த போராட்டத்திற்கு முயற்சி என அடுக்குமொழியில் மிடுக்காக பதிலளித்தார் வை.கோ. பிரபாகரனுக்காக போராடும் நீங்க ஏன் எனக்காக போராடல கேப்டனின் கேள்வி வை.கோ வை குழப்பியது.....
அட நானும் கேப்டன் பிரபாகரன் தானே என்று டைமிங்காக கூறியதும் தன் கவலைகள் எல்லாம் மறந்து குலுங்கி குலுங்கி சிரித்தார் வை.கோ.. ஒருவாறு சிரித்து முடித்ததும் கவலைபடாதிங்க வரும் 2016ல ஆட்சியை ம.தி.மு.க பிடிச்சதும் உங்க பிரச்சினைய தீர்த்து வைக்கிறேன் என்றார்....
இப்ப கேப்டன் வயித்த பிடிச்சுகிட்டு உருண்டு பெரண்டு தாவி குதிச்சு பல்டியடிச்சு சிரிச்சாரு. ரெண்டு பேருமே கட்சி கவலைகளை மறந்து செஞ்சி காமெடிய பாத்து தொகுதி மக்கள் எல்லாம் காமெடி சானல் பாத்த திருப்தியில் கை கொட்டி சிரிக்க....
இருவரும் மகிழ்ச்சியாக விடை பெற்று கொண் டார்கள்..
கப்ஸா செய்திகளுக்காக
ரிஷிவந்தியத்திலிருந்து
ஊத்தவராயன்....
No comments:
Post a Comment