Monday 11 November 2013

மணிவண்ணனுக்கு......

தோழர் மணிவண்ணனுக்கு நினைவஞ்சலி..........

"அலைகள் ஓய்வதில்லை" எழுதிய கலையலையே.. 

  எங்களுக்குள் ஓயாது உன் நினைவலைகள் ...

 "100வது நாளும்,24மணி நேரமும்" தராத திகில்
  
  நீ மறைந்த போது எங்களுக்கு... 
  
 முன் நின்று யார் யாருக்கெல்லாம் போராடினாயோ 
 
 அவர்களுக்கு "இனி ஒரு சுதந்திரம்" கேள்வியாய்... 
 
 சுற்றும் வாழ்க்கை சக்கரத்தில் இப்போது நீ இல்லை 
 
 ஆனால் உன் நினைவுக்கு ஏது எல்லை ..
 
 எல்லா காலமும் "இளமை காலங்களாக" வாழ்ந்தவனே...
  
 "அமைதிப்படை அல்வாவை "நீ எமனுக்கு ஏன் தரவில்லை? 

  நல்ல கலைஞராக, நல்ல தோழராக, நல்ல போராளியாக,

  நல்ல மனிதராக உன்னை பற்றிய மதிப்பு பல நெஞ்சங்களில் 

  கோபுரமாய் உயர்ந்து நிற்கிறது ..

   அந்த "கோபுரங்கள் சாய்வதில்லை"....

          "கண்ணீர் அஞ்சலிகள்"........

No comments:

Post a Comment