Friday 22 November 2013

ராஜபக்ஷேவிடம் விசாரணை....

ஒரு கற்பனை.....

ராஜபக்ஷே மீது போர்க்குற்ற விசாரணை...

(ஐ.நா.விசாரணை அதிகாரிகள் அமர்ந்திருக்க அறைக்குள் நுழைகிறார் பக்ஷே...)

ஐ,நா.விசாரணை அதிகாரி : வாங்க ஏற்கனவே அவிய்ங்களுக்கும் உங்களுக்கும் (முள்ளி) வாய்க்கா தகராறு.. இப்ப பொண்ணு பிரச்சனை வேற...

ராஜபக்ஷே : (முழிக்கிறார்)

ஐ.நா : ஏப்பா எங்க பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா: ப்ச்ச்.. எங்க பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (மற்ற அதிகாரிகளை பார்த்து) நான் சரியா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (மற்ற அதிகாரிகளை பார்த்து) நான் கரெக்டா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (ஒவ்வொரு அதிகாரிகளாக பார்த்து) நான் கரெக்டா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட ஒரு கிளாஸ் தண்ணி குடித்து விட்டு ) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியாடா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியாடா?

ஐ.நா : (கோபத்துடன்) கைய புடிச்சு இழுத்தியாடா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியாடா?

(ஐ.நா டென்ஷனாகி எந்திரிக்க மற்ற அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி) இருங்க நாம எல்லாம் கேப்போம்?

ஐ.நா 1 : இனப்படுகொலை...

ரா.ப : என்ன இனப்படுகொலை?

ஐ.நா 2 : அந்த வதை முகாம்கள்....

ரா.ப : என்ன வதை முகாம்கள்?

ஐ.நா 3 : தமிழர் உரிமை......
 
ரா.ப : என்ன தமிழர் உரிமை?

ஐ.நா 4 : மீனவர் படுகொலை...

ரா.ப : என்ன மீனவர் படுகொலை?

ஐ.நா 5 : சரணடைந்தவர்கள்....

ரா.ப : என்ன சரணடைந்தவர்கள்?

ஐ.நா அதிகாரிகள் அனைவரும் திரும்ப திரும்ப பேசற நீ  திரும்ப திரும்ப பேசற நீ கத்திக் கொண்டே ஓடுகிறார்கள்.... ( கள்ள சிரிப்புடன் பக்ஷே கிளம்புகிறார் )

நண்பர்களே இது காமெடி இல்லை இப்படி ஒரு விசாரணை கண் துடைப்பாக நடந்து விடாதிருக்க வேண்டுவோம்...

No comments:

Post a Comment