Saturday 9 January 2016

25. ஒருத்தி மகனாய்...

#ஆண்டாள்_பெருமை

கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்  கண்ணனை சிலாகித்தவர் முத்தையா என்னும் தன் இயற்பெயரைக்  கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித்துவமான கவிதைகள் பல எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பாடலில் எடுத்துக் கொண்டார்.. எம்.ஜி.ஆர் படமான தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெரும் பாடலில் ஆண்டாளின் இப் பாசுர வரிகள் உள்ளது.

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்... என்ற பாடல் இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்.. அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள் எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான். இப்போது ஆண்டாளுக்கு வருவோம்.

தாய்மாமன் கம்சனால் சிறைவைக்கப்பட்ட தேவகி என்னும் ஒருத்திக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யமுனையைக் கடந்து யசோதையிடம் அடைந்து அந்த ஒருத்தியின் மகனாக மறைவாக வளர்ந்தவனே.. நீ உயிருடன் இருப்பது தெரிந்து கஞ்சன் வயிறு எரிவது போல கம்சன் வயிறு எரிய அவன் இழைத்த தீங்குகளை தவிடு பொடியாக்கினாய்.. வானுக்கும் பூமிக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்து உருகினோம்.

நாங்கள் விரும்பிய பறையை அருளினால் அதையிசைத்து உன் வீரத்தையும் செல்வத்தையும் வாயாரப் பாடி எங்கள் வருத்தம் தொலைத்து மகிழ்வோம். கண்ணனை வாயாரப்பாடினாலே வருத்தம் தொலையுமாம். கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சொல்வது ஒன்று தான். கண்ணனை நினைத்து அவன் புகழ் பாடி சரணாகி துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டி" என உத்திரவாதம் அளிக்கிறார் ஆண்டாள்.

தாய் சொல்லைத்தட்டாதே என்ற படத்தில் வரும் கவிஞரின் பாடல் MGR க்கு எழுதியது.. ஆனால் பாடலின் அந்த வரிகள் அப்படியே கண்ணனுக்கும் பொருந்தும்படி கவிஞர் எழுதியிருப்பதை கேட்க கீழுள்ள லிங்க்...


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment