Friday 8 January 2016

24. அன்று இவ்வுலகம்...

#ஆண்டாள்_பெருமை

இப்பாடலில் ஆண்டாள் கிருஷ்ணலீலைகளையும் பிற அவதாரங்களையும்  அவர் செய்த வதங்களையும் போற்றிப் பாடுகிறார். சண்டைக்கு பாட்டா.? சென்னை குப்பங்களில் பாட்டுப் பாடிக் கொண்டு போடும் குஸ்திச் சண்டை இருந்தது. சண்டையிடுபவர் தன்னைப்பற்றி பெருமையாகப் பாடிக் கொண்டே சண்டையிடுவார்கள். இது மதுரைப் பகுதிகளிலும் சிலம்புச் சண்டையில் உண்டு. நான் தான் உங்கொப்பன்டா, நல்லமுத்து பேரன்டா..   

வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாடப் போறேண்டா எனத் தொடங்கும் பாடல் கேட்டு இருப்பீர்கள்.. பெருமாளின் அவதாரச் சண்டைகளை பிறர் செருக்கை அழித்தசெயலை அப்படியே ஒரு மெட்ராஸ் குப்பத்து ஆள் ஒருத்தர் தன் தலைவனை பார்த்து அவர் அருமை பெருமையை புகழ்ந்து பாடினா எப்படி இருக்குமோ அப்படி இந்தப்பாடலை யோசித்தேன் அட இந்தத் தமிழிலுமே இப்பாடல் படா சோக்காகீதுப்பா.

அன்னிக்கு ஒரு தபா காலாலெயே ஒல்கத்த அள்ந்தவுரே! உன் காலத் தொட்டு கும்புட்டுக்றோம்.. சிலோனுக்கு போயி அங்க ராபணன் கதய முட்ச்சவரே! உனுக்கு இர்க்குற தில்ல நென்ச்சு பெர்மப்படுறோம்.. சனியன் சகடய எட்டி மிறிச்சவரே உன்ய புகய்ந்து பாடுறோம்.. கன்னுக்குட்டி மேறி வேசங் கட்டிகினு வந்த வத்சாசுரன அப்டியே கபால்ன்னு கால புட்ச்சு தூக்கி

பக்கத்துல மரம் மேறி வேசம்கட்டி நின்னுகினு இர்ந்த கபித்தாசுரன் மேல்ய விசிறி அட்ச்சி ஒர்யே கல்லுல ரெண்டு மாங்கா அட்சா மேறி ரெண்டு பேரியுமே காலி பண்ணவரே! உன் பாதத்தில மாட்டினு இருக்குற வீரகழல தொட்டு கும்புட்டுக்றோம்: கோகுலத்துல  குடபுட்ச்சது கணக்கா அப்டியே ஏக் தம்முல அலேக்கா மலய தூக்கி மக்கள காப்பாத்ன கோவர்த்தனரே.! உன் பாசமான கொண்த்த நென்ச்சு பெர்மப்படுறோம்!

உனுக்கு எதிரியா எப்டியாப்பட்டவன் வந்து நின்னாலும் கெலிக்குற உன் வேல் கம்ப புகயறோம்  இப்டி ஒன் அல்லா பெர்மயயும் வீர தீரத்தயும் பறயட்ச்சு பாடிகினு இர்க்கதான் இங்க வந்தோம்.. எங்க மேல இர்க்கம் காட்டி ஒன் அருள கொட்த்துடு சாமி... ஆண்டாளம்மா எம்மா அயகா சொல்லிக்கீறாங்க இல்ல..!  நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா..

மார்கழி 24 ஆம் நாள் பாடல்...

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment