Wednesday 13 January 2016

29. சிற்றம் சிறுகாலே...

#ஆண்டாள்_பெருமை

மார்கழி முடிய இன்னும் 1நாள் தான் இருக்கு கடந்த 28 நாளா பாடுறோம்.. ஒரு வேளை எதுக்கு இந்த பாட்டெல்லாம் கண்ணனுக்கு புரியலையோ.? டாடி எனக்கு ஒரு டவுட்டு போல சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு.. அம்மாவின் அமைச்சரவை அமைச்சர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே! ஏன்?சரி விஷயத்தைக் கேட்டுட வேண்டியது தான். 

அது மட்டுமல்ல இந்த 29 வது நாள் பாடலில் வித்யாசமான ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறார். மனதில் படும் ஆசைகளுக்கு காவல் வைக்கச் சொல்கிறார்.. ஆசைக்கு காவலா.! ஆண்டாள் ஆட்டையில இது புதுசா இல்ல இருக்கு.. என்கிறீர்களா.. ஆம் அந்தக் காவலும் எதற்கு என்றால் ஆண்டாளின் காதல் மேம்படவே.. புரியலையா? சரி வாங்க சொல்றேன்.

இந்தாப்பா கண்ணா தினம் அதிகாலையில வந்து உன் காலில் விழுந்து உன்னை கும்பிடுறோம் இதுக்கான காரணம் என்னான்னு இப்ப கேட்டுக்கோ.. நாங்க எல்லாரும் பசுமாடு மேய்ச்சு கிட்டே பாட்டுப் பாடி கட்டுச் சோறு சாப்பிட்டு ஜீவனம் நடத்துற ஆயர் குலத்தவங்க ஆனா நீயோ பெருமையான கடவுள்.. நீ பந்தா எதுவும் இல்லாம எங்க குலத்தில் வந்து பிறந்த பாரு நாங்க அதுக்கு தான் இப்படிச் செய்யறோம்.

உன்கிட்ட இருந்து கொடுன்னு கேட்டு அதை வாங்கிகிட்டு போக மட்டும் நாங்க வரலை உனக்கு ஏதாவது ஒரு சின்ன உதவியாவது நாங்க பதிலுக்கு பண்ணணும் இல்லியா? இல்லாட்டி அது எங்களுக்கு பெரிய அவமானம்.. உனக்கு எடுபிடியா இருந்து சின்னச் சின்ன வேலைன்னாலும் சரி எங்களை அதைச் செய்யவிடு.. இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மம்...

எடுத்தாலும் உன்னுடன் சேர்ந்தவங்களாக தான் இருப்போம் உனக்கே பணி செய்து கிடப்போம்.. கடைசியா ஒண்ணு கேக்குறோம் எங்களக்கு இதைத்தவிர வேற ஆசை ஏதாவது வந்தா அப்படி ஒரு நெனப்பே வராத மாதிரி நீ அருள் செஞ்சா போதும்.எப்படி பாருங்க கண்ணனை நினைப்பதை தவிர வேறு ஆசைகள் வேண்டாமாம். வந்தாலும் அதை அகற்றணுமாம்.

அதாவது உன்னை நினைக்கிற இந்த மனசுல வேற நினைப்பே வரக்கூடாது எங்கள் ஆசைக்கு காவல் இரு வேறு ஆசைகள் வந்தா உள்ள விட்டுறாதே.. இப்ப கண்ணன் தான் ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி வேற நினைப்பு வந்தா அவரது காவல் சரியில்லைன்னு அர்த்தம் ஆகிடுமே.. 

நாங்க உன்னை தாம்பா நினைச்சுட்டு இருக்கோம் வேற நினைப்பு வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல.. அப்பா கோவிந்தா.. நாங்க சொல்ல வந்தது சுருக்கமா இது தான் The ball is in your court இதை அந்த நூற்றாண்டிலேயே அழகுத்தமிழில் சொல்லி வைத்திருக்கிறார் ஆண்டாள்.

மார்கழி 29 ஆம் நாள் பாடல்...

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment