Friday 1 January 2016

17. அம்பரமே தண்ணீரே...

நிச்சயிக்கப்பட்ட அத்தை மகள் திருமணத்திற்கு முன் நம் வீடு வரும் போது எடுத்தவுடன் அத்தானை கேட்காமல் மாமா சவுக்கியமா அத்தை சவுக்கியமா நாத்தனார் சவுக்கியமா என பைபாசில் பிரயாணித்து அத்தான் என்னும் ஊருக்கு வருவதற்குள் வெட்கம் பிடிங்கித்தின்னும். அதுவும் அவர்கள் சரி சரி இதுக்கு தானே இவ்வளவு சுத்தி வந்தே..எனக் கேட்கும் போது..

அங்கே கையும் களவுமாய் பிடிபட்ட நிலை ஏற்படும் இருப்பினும் அதெல்லாம் சுகமான வலி.. இங்கும் ஆண்டாள் ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணன் என்கிறார்.. அதிலும் நந்தகோபா எழுந்திரு யசோதா எழுந்திரு என எல்லாரையும் எழுப்பி கண்ணனை மட்டும் பலராமா அப்படியே உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் நாணம் ததும்ப.. அதுமட்டுமின்றி..

உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றும் மனிதனுக்கு அவசியம் வேண்டும் என உலகில் முதன் முதலில் சொன்னவர் ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்.இதைக் கேட்ட ஆண்டாள் இருக்க இடம் மட்டும் ஏன் கேட்கவில்லை..? உலகில் சொந்தமாக சில சதுர அடிகள் நிலம் கிடைப்பதை விட உலகத்தை ஓங்கி தன் திருவடிகளால் அளந்த நாராயணன் காலுக்கு கீழ் ஒரிடம் கிடைத்தால் அதுவே அவருக்கு போதும்.

மார்கழி 17 ஆம் நாள் பாடல்...

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment