Tuesday 12 January 2016

28. கறவைகள் பின்சென்று...

#ஆண்டாள்_பெருமை

"மன்னிப்பு..ஏய்..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது.. கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்.. ஏன் தவறு செய்ய வேண்டும்..? அது தெரிந்து செய்தது அல்ல தெரியாமல் நடந்தது..ஆக்சுவலி எங்க குலத்தோட குவாலிட்டி தெரியுமா.?

காலையில மாடு கன்னு மேய்க்க ராமராஜன் மாதிரி பாடிக் கிட்டே கிளம்புவோம் பசிச்சா இருக்கிறதை பகிர்ந்து கிட்டு லஞ்ச் சாப்பிடுவோம்.. நாங்க அவ்வளவா அறிவு அதிகமில்லாத படிக்காத இடையர் குலத்து ஆளுங்க..ஆனா நீ.. எங்க குலத்துல குறையில்லாம பிறந்த கோவிந்தன் பெரிய அறிவாளி.. நீ எங்க குலத்துல பிறந்ததே பெரும் புண்ணியம் உனக்கும் எங்களுக்கும்  இருக்குற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது.

இதையும் மீறி சின்னப் புள்ளத்தனமா நாங்க எதாவது பேசியிருந்தாலோ இல்ல உன்னை தப்பா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் கோவப்படாம நாங்க செஞ்சத எல்லாம் மன்னிச்சு நாங்க கேட்டதை கொடுத்துடு அப்படி கொடுத்துட்டா அதுவே போதும் உன்னையே நினைச்சு பாடிகிட்டு இருக்கிறத வுட வேற என்னத்தசெஞ்சிடப்போறோம். 

ஆண்டாள் கண்ணனிடம் அறியாமல் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். அவன் மன்னிப்பான் என்று ஆணித்தரமாக நம்புகிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்ன்னு சொல்லுவாங்க.. முதலில் தான் ஒரு மனிதன் என்பதை மன்னிப்புக் கேட்டு நிரூபிக்கிறார் ஆண்டாள்.. நிச்சயம் அவன் மன்னிப்பான்னு அவளுக்கு நன்றாகத் தெரியும்.. ஏன்னா ரமணன் பெரிய மனுஷன் அல்லவா.

மார்கழி 28 ஆம் நாள் பாடல்...

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment