Sunday 10 January 2016

26. மாலே மணிவண்ணா...

#ஆண்டாள்_பெருமை

மனிதர்கள் கடவுளிடம் வேண்டும் போது என்ன கேட்பார்கள்? பி.எம்.டபிள்யூ கார், பெரிய பங்களா,  தங்கம், வைரம், கோடி கோடியாய் பணம், பெயர், புகழ், நீண்ட ஆயுள் , தோட்டம் துரவு, நிறைவான செல்வம் என அவர்கள் லிஸ்ட் பெரிது. ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது லிஸ்ட்டில் இதெல்லாம் தேவைப்படவில்லை! அதை படிப்போமா.

மணிவண்ணா.. இந்த மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளில் என்ன வேண்டும் என நீ கேட்டால்.. இந்தா என் பட்டியல்.. உலகம் அதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண்சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக் கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும்..

ஆலிலைக் கண்ணா இவையெல்லாம் எமக்கு அருளினாலே போதும்.. தட்ஸ் ஆல்.. பாருங்கள் இதில் ஏதாவது ஒரு இடத்திலாவது சராசரி மனிதனின் ஒரு ஆசையாக இருக்கிறதா என்று.. அவருக்கு ஒரே ஆசை கண்ணன் தான்.. தனக்கு கிடைக்கும் செல்வத்தையும் புகழையும் விட  கண்ணனைப் புகழ்ந்து பாடிட இப்பொருட்களே போதும் என்கிறார் மிகச் சிம்பிளாகவும் ஹம்பிளாகவும்.

மார்கழி 26ஆம் நாள் பாடல்...

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment