Monday 4 January 2016

20. முப்பத்து மூவர்...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவையில் பஞ்ச் டயலாக்.. ஆச்சர்யமாக இருக்கிறதா கண்ணனுக்கு ஆண்டாள் பஞ்ச் டயலாக் எழுதியிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா புயலடிச்சு பொழைச்சவன பார்த்துருக்க இந்த பூபதி அடிச்சு பொழச்சவனை பார்த்துருக்கியா ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.. நான் ஒரு தடவ சொன்னா.. கண்ணா சிங்கம் சிங்கிளாத் தான் வரும் இதற்கெல்லாம் குறைவில்லாத ஒரு பஞ்ச் ஆண்டாள் வைக்கிறார்.

கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னை மார் மீது தலை வைத்து கொஞ்சம் ரொமாண்டிக்காக கண்ணன் உறங்கினார் அல்லவா.. அந்த சுகத்தில் ஒரு பாட்டுக்கே எழுந்து வந்து விட்டால் நன்றாக இருக்குமா.?ஆக இந்தப்பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்.. இந்தப்பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார்.. இதன் உள் குத்து இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ பொம்பளை மார்ல சாஞ்சிகிட்டு என உசுப்பிவிடத்தான்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனைன்னா சொல்லாம அங்க  ஆஜராகுரா வீரா, ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்சல் வரும் தூயவனே" அடடா என்னா ஒரு பஞ்ச் என்னா ஒரு அடைமொழி! இப்படி கண்ணனை சொல்லிட்டு கொஞ்சம் "பீப்" ஒலிக்க வேண்டிய வார்த்தைகளை நப்பின்னைக்கு வர்ணனையாகச் சொல்கிறார்.

பக்தி இலக்கியங்களில் பெண்ணின் மார்பகம், பிறப்புறுப்பு பற்றியெல்லாம் சகஜமாக எழுதிய பெண்களில் ஆண்டாளும் ஒருவர்.. அக் காலத்தில் இதெல்லாம் சாதாரணம்.. இப்போது தான் கண்ணியம் இன்றி எழுதுவது எல்லாம் பெண்ணியம் எனப் பேசுகிறார்கள். செப்புக் கவசம் போல் மார்பகங்களும்,செவ்விதழ்களும் சிறு மருங்குல் தாங்கிய இடுப்பும் உள்ள நப்பின்னையே நீ எழுந்து நோன்பிற்குரிய விசிறியையும் கண்ணாடியையும்..

உன் மணவாளனிடத்தில் தந்து எங்களுக்கு அதை தரச்செய்து எங்களை நீராட விடுவாயாக என்கிறார்.. ஒன்று நிச்சயம் பாசுரத்தில் பஞ்ச் பீப் எல்லாம் 
இருப்பது தெரிஞ்சா சினிமாக்காரர்கள் இந்த பக்கம் பாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.. கப்பம் செப்பம் வெப்பம் என டி.ஆருக்கும் முன்னோடியாக ஆண்டாள் இருந்து தான் ஒரு சகலகலாவல்லி என்பதை நிரூபித்து இருக்கிறார்.. யார் கண்டது அவர் காலத்தில் சினிமா இருந்திருந்தால் அதிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார் ஆண்டாள்.

மார்கழி 20 ஆம் நாள் பாடல்....

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment