Friday 27 May 2016

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் 2

#அமெரிக்கப்_பாராளுமன்றத்தில்

பார்ட் - 2

சசி அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறு தான் மெட்டல் டிடெக்டரை அலற வைத்தது அதை கழட்டச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள் அதைப் பற்றி நாங்கள் விளக்க அதை காதில் வாங்காது ஒரு கெமிக்கல் தடவிய பேப்பரில் அதைத் துடைத்து பேப்பரை ஸ்கேன் செய்தார்கள் இன்னொரு டிடெடக்டரில் தடவினார்கள் இப்படி அதை பல்வேறு சோதனைக்கு உள்ளாக்கி திருப்தியானதும் அதை ஒரு ஜிப்லாக் பாலிதீன் கவரில் போட்டு..

அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு அதற்கு ஒரு டோக்கன் தந்தார்கள்.. திரும்பிப் போகும் போது தான் வாங்கிக்கொள்ள முடியுமாம்.. உள்ளே நுழைந்தோம்.. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் லாபி போல ஒரு கூடம் சுற்றிலும் ஆளுயர உயிர்ப்பு மிக்க சிலைகள்.. நடுநாயகமாக அமெரிக்கன் லேடி என்னும் விஸ்வரூப சிலை.. அங்கிருந்த கவுண்டரில் போய் நமது டிக்கெட் தந்தவுடன் டூர் பாஸ் ஒன்றும் ஸ்டிக்கர் ஒன்றும் தருகிறார்கள்.






ஸ்டிக்கரை சட்டையில் தெரியும் படி ஒட்டிக் கொள்ளவேண்டும்.. நீண்ட வரிசையில் போய் காத்திருந்தோம்.. இந்த நேரத்தில் இந்த பார்லிமெண்ட் பற்றி பார்த்துவிடுவோம். இந்தக் கட்டிடம் கேபிடல் பில்டிங் என்று அழைக்கபடுகிறது. கேபிடல் என்பது லத்தீன் மொழிச் சொல் இதற்கு ஆலயம் என்பது பொருள் வில்லியம் தோர்ன்டன் என்பவரால்1793 ஆம் ஆண்டு துவங்கி 1800ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது கேபிடல்.

கட்டிடத்தின் கட்டுமான தரைப்பகுதி மட்டுமே 16.5 ஏக்கர்கள். பொதுவாக அமெரிக்காவில் உள்ள புரதான கட்டிடங்கள் எல்லாம் ரோமானிய கட்டிடக் கலையை அடிப்படையாக கொண்டிருக்கும்.. எந்த மாநிலம் போனாலும் அந்த பாணி தெரியும்.. இதை வாஸ்து என நம்புபவர்களும் உண்டு.. இப்போது உள்ள பார்லிமெண்ட் இதே கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது கிழக்குப் பகுதியில் உள்ளது பழைய பார்லிமெண்ட் ஆகும்.






இதைத்தான் சுற்றுலா பயணிகளுக்கு காட்டுகிறார்கள்.. அமெரிக்க பார்லிமெண்ட் காங்கிரஸ் என்றழைக்கப்படுகிறது.. ஆங்கிலத்தில் குரங்கு கூட்டத்திற்கு காங்கிரஸ் என்று பெயர்.. நாங்கள் போன அன்று இன்றைய பார்லிமெண்ட் கட்டிடத்தில் அவை நடந்து கொண்டு இருந்தது அதை பார்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆபிஸ் போய் அனுமதிக் கடிதம் வாங்கிப் பார்க்கலாம் என்றார்கள். டூர் பாசை காட்டினால் போதுமாம்.

அது தெற்குப் பகுதியில் இருப்பதாக சொன்னார்கள் 3கி.மீ நடக்கணுமாம்.! ஆகவே அந்த ஆணியை பிடுங்கவே இல்லை. இதோ வரிசை நகர ஆரம்பித்துவிட்டது உள்ளே போகலாமா.! க்யூவில் நிற்கும் போது செல்ஃபி எடுத்தேன் பின்னால் நின்ற சீனச்சிறுமி அதில் எட்டிப் பார்த்து என்னை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.. (நம்ம மூஞ்சிலேயே தெரியுதோ)ஒவ்வொரு 20 பேரையும் முதல் நிலைக்கு அனுப்பி அவர்களை ஒரு குழுவாக ஆக்கி...


அதற்கு ஒரு கைடு தலைமை தாங்குகிறார் எங்களுக்கு அழகிய கருப்பினப் பெண் ஒருவர் கைடாக வந்தார்.. இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார் அவரது பேச்சுக்கு எங்கள் குழுவினர் சிரித்துக் கொண்டே இருந்தனர்..அவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை மேடிட்ட வயிறு சொல்லியது... அவர் முகத்தில் குறும்பும் தாய்மை உணர்வும் கலவையாய் மிளிர்ந்தது அவர் கையில் 20 ஹெட் செட் இருந்தது

முதலில் எங்கள் அனைவருக்கும் ஓரு ஹெட் செட் வழங்கப்பட்டது.. அந்த 20 ஹெட்செட்டும் அந்தப் பெண் பேசும் மைக்ரோ போனின் அலை வரிசையில்  இருந்தது.. கைடு பேசுவதை நாங்கள் துல்லியமாக கேட்க அந்த ஏற்பாடு.. முதலில் ஒரு மாடம் போன்ற பகுதிக்கு போனோம் ஜார்ஜ் வாஷிங்டன் லிங்கன் போன்றவர்களின் சிலைகள் இருந்தன. அதன் பின் வந்த பெரிய ஹாலிலும் பிற ஜனாதிபதிகளின் சிலைகள் இருந்தன.



சபாநாயகர் அறை, விவாத அறை, செனட் நடக்கும் இடம் அதன் பெருமை, கூரை ஓவியங்கள், அதன் வரலாறு என அழகான ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டே வந்தார் என்ன ஒரு குறை என்றால் மாளிகையின் பல பகுதிகளில் மராமத்து பணிகளுக்காக திரும்பிய பக்கம் எல்லாம் ஸ்டீல் சாரங்களும் வெள்ளைத் துணிகளும் போட்டு மூடியிருந்தார்கள் சன்னிலியோனை தழைய தழைய பட்டுப்புடவையில் பார்த்தது போல ஏமாற்றம் வந்தது. 



இருப்பினும் சுவாரஸ்யம் குறையாமல் டூரை நடத்தினார் அப்பெண்.. வரும் பள்ளிப் பிள்ளைகளிடம் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரிந்து அதற்கேற்றபடி அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கினார்.. அமெரிக்க அரசியல் வரலாற்றை மிகத்துல்லியமாக விரல் நுனியில் வைத்திருந்தார்.. எல்லா கைடும் அப்படித்தானாம்.. அவர் சொன்ன ஒரு சுவையான செய்தி அந்த காலத்து சபை நடந்த போது எதிர்கட்சியினர் என்ன பேசினாலும்..

ஆளுங்கட்சி அதை கண்டுபிடித்து விடுமாம்.. வடிவேலு அர்ஜுனிடம் மட்டும் அக்கா கடையை பத்தி சொன்னது எப்படி ஊருக்கே தெரிந்ததோ அதைபோல எதிர்க்கட்சியினர் இங்கு குழம்புவார்களாம். வெகுநாட்கள் கழித்து தான் உலகுக்கு அந்த உண்மை தெரிய வந்தது.. அது ஒரு சுவாரஸ்யமான செய்தி அதை அப்படியே டெமோ செய்து காட்டினார் அனைவரும் வியந்தோம் அது என்ன தெரியுமா.! அது பற்றி நாளை 

(வரும்)


No comments:

Post a Comment