Thursday 25 May 2017

அம்மா சமாதியில் கலைஞர்..

கலைஞர் பூரண நலமடைந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவிக்க எங்கே கலைஞர்? அவர் உடல் நலம் எப்படி இருக்கு? எனக்கேட்ட அனைவருக்கும் நன்கு குணமாகிவிட்டார் என்பதை நிரூபிக்க அவரை வெளியே அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கிறது.. முதலில் சண்முகநாதனை அழைத்து தான் சிகிச்சையில் இருந்த போது வெளி வந்த அத்தனை பத்திரிக்கைகளையும் எடுத்து வரச் சொல்கிறார்.



துரைமுருகன், ஸ்டாலின், நேரு என அனைவரையும் அழைத்து தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிகிறார்.. அடுத்த நாள் சண்முகநாதன் நாளிதழ் செய்திகளை படித்துக் காட்ட ஃபுல் ரெஃப்ரஷ் மோடுக்கு வந்த கலைஞர் மக்கள் முன் தோன்றத் தயார் என்றார். அய்யா அறிவாலயத்திலா அல்லது கோபலபுரத்திலேயே வா என கழகத்தார் கேட்டபோது.. மெலிதாக புன் முறுவல் பூத்தார்.

ஜு.வி கழுகார் பாணியில் சொன்னால் கலைஞர் டிக் அடித்தது மெரீனாவுக்கு.. நடந்த அத்தனை சம்பவங்களையும் அவரது  ஸ்மார்ட் மூளை நேர்த்தியான மாலையாக கோர்த்துக் கொண்டிருந்தது தன் ஃபேஸ்புக் பேஜில்"உலா வரவிருக்கிறது உதய சூரியன்" என மெசேஜ் தட்டி விட்டு விட்டு என் டிவிட்டரையும் ஆக்டிவேட் பண்ணிடுங்கய்யா எனக் கூறி உற்சாகமாக பாகிஸ்தானுக்கு எதிராக துவம்சம் செய்த இளம் வயது டெண்டுல்கர் போல கிளம்பி நின்றார் கலை(இளை)ஞர்.

அய்யா திட்டம் என்ன என்ற போது.. அண்ணா சமாதி என்றார்.. கழகத்தார் அணிவகுக்க அண்ணா சமாதியில் வணங்கிவிட்டு அடுத்து ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆர் சமாதிக்கும் ஒரு விசிட்.. அங்கிருந்து கிளம்ப.. அய்யா நேரா அறிவாலயம் தானே.? என்ற போது கணீரென தன் கரகர குரலில் சொன்னார் "இல்லை அம்மையார் சமாதி" என்றார் அனைவரும் அதிர்ச்சியில் உறைய.. அர்த்தமாக சிரிக்கிறார்..

"அங்கே அறிவாலயத்தில் நிருபர்கள் காத்திருக்காங்க அய்யா அவர்களை இங்கே வரச் சொல் என்றார்.. ஏன் இந்த திடீர் முடிவுன்னு அவர்கள் கேட்டா? சமூக வலைத்தளங்களில் என்னை கட்டுமரம் என்று கலாய்க்கிறார்கள் அல்லவா கட்டுமரம் கடற்கரைக்கு அழைப்பதில் தவறொன்றும் இல்லையே என்றார் கேலியாக.. எந்தச் சூழலிலும் அவரது நகைச்சுவை திறன் குறையவில்லை என்பது..

அங்கு இருந்தவர்களின் சிரிப்பொலியில் அதற்குச் சான்றானது அம்மா சமாதிக்கு கலைஞர் வருகிறார் என்ற செய்தி வாட்ஸ் அப் வதந்தியாய் பரவ மீடியாக்கள் மெரீனா நோக்கிப் படையெடுக்க.. டிவி லைவ் வேன்கள் நிறுத்தப்பட இன்னொரு ஜல்லிக்கட்டுக்கு இணையான பரபரப்பு மெரீனாவில் தொற்றிக் கொண்டது.. ஒரே அறிவிப்பில் அதைச் செய்ய அவரைத் தவிர யாரால் முடியும்! இதோ அம்மா சமாதி.

மீடியாக்கள் படை சூழ்ந்த பின்பு கலைஞர் அம்மா சமாதிக்குள் நுழைகிறார்.. அவர் சார்பாக ஒரு மலர் வளையம் வைப்பதற்கு முன் சமாதியின் மேலிருந்த பழைய மலர்மாலைகளை ஒருவர் அகற்ற உதிரி பூக்களை ஒருவர் கையால் தள்ள.. "பாத்துய்யா அந்தம்மா சத்தியம் செஞ்சா மாதிரி ஓங்கி அடிச்சிராதிங்க" என கலைஞர் அடித்த கமெண்ட்டுக்கு ஏராளமான சிரிப்பு லைக்குகள் விழுந்தன.

தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஒரு நிமிடம் கண் மூடி சிந்திக்கிறார்.. கண்ணைத் திறந்து ம்ம் இப்போ நான் தயார் கேள்விகளைக் கேட்கலாம் என்கிறார் நிருபர்களைப் பார்த்து.. அய்யா உங்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் ஜெயலலிதா அவர் சமாதிக்கு இன்று நீங்கள் வர என்ன காரணம் அரசியல் ஆதாயமா என முதல் கேள்வியையே பவுன்சராக வீசினார் ஒரு நிருபர்

ஒரு நொடி கூட தாமதிக்காமல் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று சொன்ன அண்ணா வழியில் வந்த எமக்கு அப்படி ஒரு ஆதாயம் தேடவேண்டிய அவசியமில்லை என அந்த பவுன்சரை அப்படியே டிவில்லியர்ஸ் போல சிக்சருக்கு தூக்கினார்.. ஜெயலலிதாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என இன்னொரு நிருபர் கேட்க.. முகத்தில் புன்னகை ஏதுமின்றி..

அவர் என்றுமே மிகச் சிறந்த நடிகை அவரைப் போல நடிப்பது கடினம் என்றார் சிலேடையாக.. புரிந்தவர்கள் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.. அதிமுக கட்சியில் நடந்த குழப்பங்கள் எல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்ததா.? ஆம் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன் என்றார்.. இனி அந்தக் கட்சி என்னாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்றார் இன்னொரு நிருபர்.

அது அந்தக் கட்சியினர் படுகின்ற கவலை.. நான் எதற்கு அதைப் பற்றி கருத்து கூறவேண்டும் என பதிலளிக்க அய்யா இந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தல் பற்றி? ஜனநாயகத்தை பணநாயகத்தால் வாங்கிட நினைத்தார்கள் அவர்கள் தம் எண்ணத்திலே மண் விழுந்துவிட்டது.. அப்படி பார்த்தால் திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்ததே உங்கள் கட்சி என மக்கள் நினைக்கிறார்களே அது பற்றி..?

உண்மையை எளிதில் மூடி மறைத்துவிட்டு இப்படிக் கேட்டு எங்களை எள்ளல் செய்வது உங்கள் வாடிக்கையாகிவிட்டது.. அம்மையார் பர்கூர் தொகுதியில் நிற்கும் போது தான் இவ்வழக்கம் முதலில் துவங்கியது..ஏதோ கழகம் தான் இதை ஆரம்பித்து வைத்தது என விஷமப் பிரச்சாரம் செய்யவேண்டாம்.. அய்யா சசிகலா பற்றி..? நல்ல நடிகை இளமைக் காலங்கள் படத்தில் அறிமுகமானார்..

அவர் கமலுக்கு ஜோடியாக நடித்த வெற்றிவிழா இன்றளவும் எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று!அய்யா நாங்க கேட்டது அந்த சசிகலாவை அல்ல VKசசிகலா.. இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதை இன்னுமா நீங்கள் புரிந்து கொள்ளவில்லை! அய்யா தினகரன் பத்தி கேட்கிறோம் அது எனக்கு பிடித்த நாளிதழ்ன்னு மட்டும் பதில் சொல்லாமல் சொல்லுங்க..ப்ளீஸ்

குறுக்குவழியில் வந்தவர்கள் சிம்மாசனம் ஏற முடியாது.. நேர்வழியில் வரும் எங்கள் செயல் தலைவரே இதுவரை முதல்வர் ஆக முடியாமல் காத்திருப்பதை இந்த தமிழகம் அறியும்.. இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது சரியா.? மிகச்சரி ஆருயிர் நண்பர் எம்ஜிஆர் தான் மட்டும் தொப்பி அணிந்து மக்களை சந்தித்தார் வென்றார் இவரோ மக்கள் அனைவருக்கும் தொப்பி அணிய நினைத்தார்.. தோற்றார்.

தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வருமா.? வரும் ஆனா வராது என்ற தம்பி வடிவேலுவின் நகைச்சுவையை இதற்கு பதிலாக வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் ஆக்டிவாக இருந்திருந்தால் இந்நேரம் அதிமுகவை உடைத்து அரசு அமைத்து இருப்பீர்கள் என ஒரு கருத்து உலவுகிறதே இதோ மீண்டும் வந்துவிட்டீர்கள் அப்படி நடக்குமா.? யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது..!

உங்களைப்போல முடிவெடுக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்கிறார்களே அது சரியா.? என்னைப் போல முடிவு நான் மட்டுமே எடுக்க முடியும் அப்படி எடுக்கத் தெரிந்து இருந்தால் அவரை ஸ்டாலின் என்று அழைக்காமல் கலைஞர் என்று அழைத்திருப்பீர்கள்.. அவர் அவர் தான்.. நான் நான் தான்.. அவரளவில் அவர் கண்ணிய அரசியல் செய்கிறார் என்று பலர் கூறுகிறார்கள் அதுவே போதும்.

தமிழக அரசை மத்திய அரசு அடிபணிய வைத்து விட்டது என்கிறார்களே அது உண்மையா.? மாநில சுயாட்சி என்று முழங்கி மத்தியிலும் அரசாண்டவர்கள் நாங்கள்.. எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் இப்போது வருந்துவார்கள்.. ஆனால் சூரியன் இருந்திருந்தால் நிச்சயம் எங்கள் கதிருக்கு கீழே தான் தாமரை இருந்திருக்கும் என்பதை உறுதிபட கூறுவதில் எனக்கு கிஞ்சித்தும் தயக்கமில்லை..

அய்யா நிறைவாக ஒரு கேள்வி ஒரு வேளை தேர்தல் வந்தால் உங்கள் வியூகம் என்ன?எங்கள் வியூகத்தை முன்பே அறிவித்து விட்டால் எதிரிகள் பலம் பெற்றுவிடுவார்கள்.. எங்கள் கூட்டணிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது நாளை எதுவும் நடக்கலாம் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை கழகத்தின் கொள்கைக்கு மாறாக எதுவும் நடக்காது என்று மட்டுமே சொல்லமுடியும். 

இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சோனியா, மோடி இருவருமே ஆக்சுவலா இவர் யாரோடு தான் கூட்டணி வைப்பார் என குழம்பி தூதுவிடுவதற்காக தங்கள் அடுத்தகட்ட தலைவர்களுக்கு செய்தி அனுப்ப மீண்டும் செய்திகளின் நாயகனான கலைஞர் செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் போல தன் சக்கர நாற்காலியிலிருந்து தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே கிளம்பினார்.

No comments:

Post a Comment