Tuesday 29 December 2015

14. உங்கள் புழக்கடை...

#ஆண்டாள்_பெருமை

லேட்டஸ்ட் பாத்ரூம் ஃபிட்டிங் சார் கிட்டத்தட்ட 20 இலட்சம் செலவாச்சு ஒரு ஸ்டீம் பாத் & மல்டி ஷவர் சேம்பர் பிக்ஸ் பண்ணியிருக்கேன் வாட்டர் பிரஷர்ல தெறிக்கும் பாருங்க அதுல குளிக்கிறதே தனி சுகம் பைப் எல்லாம் ஜாகுவார் கம்பெனி.. குழந்தைகளுக்கு ரிவால்விங் பாத்டப் கூட ஒண்ணு இருக்கு.. இது இன்றைய வசதி படைத்தவர்களின் குளியலறை.

ஆனால் 20இலட்சமல்ல 20 கோடி கொடுத்தாலும் கிட்டாத நேச்சுரல் பாத் ரூம் ஆண்டாள் காலத்தில் பாருங்களேன் வீட்டு பின் புறத்தில் அமைந்துள்ள குளம் அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி என்பதால் நிச்சயம் சில்லென்ற நீர்  இப்படி ஒரு குளத்துக் குளியல் மல்டி ஷவர் தருமா.? அந்த பெண்ணை எழுப்புகிறார்..

பெண்ணே காலையில் சூரியன் உதித்து தாமரை மலர்ந்து அல்லி மூடி விட்டது வெண்ணிறப் பற்கள் மின்ன காவியணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கு முழங்க கிளம்பிவிட்டனர். உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை.. எழுந்து வா

நீளக்கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கும் தாமரைக் கண்ணனை அவரின் அழகை அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.
மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடிக்கொள்வதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.

இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாய் மூட மறந்து திளைத்துக் கிடக்கிறார்கள் ஆண்டாளின் தமிழ் குளத்தில்.

மார்கழி 14 ஆம் நாள் பாடல்...

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment