Sunday 27 December 2015

1. மார்கழித் திங்கள்..

#ஆண்டாள்_பெருமை

ஒரே வார்த்தையில் பல விஷயங்களை  சொல்லிவிடுவார்கள் சிலர். ஆண்டாளும் அப்படியே நிலா சூரியன் மேகம் மூன்றுமே கண்ணன் ஒருவனே என்கிறார்.. கார்மேக வண்ணமும் சூரியன் போல சூடும் நிலா போல் குளிர்ச்சியும் ஒன்றாக உடையவன் என்கிறார்.. மார்கழி மாதத்து நிறை நிலா நன்னாளில் நீராடச் செல்வோம் 

ஆயர்குல செல்வப் பெண்களே கூரான வேலினால் கொடுமையை அழிக்கும் நந்தகோபனும் அழகிய கண்ணுள்ள யசோதையும் வளர்த்த இளம் சிங்கம் கார்மேகவண்ண சூரிய சந்திரன் போல முகமுடைய கண்ணன் நமக்கு பறை தந்து அருள்வான் உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள்.

இந்தப் பாடலில் ஏரார்ந்த கண்ணி என்று அழகான கண் உடையவள் என யசோதையையும் வர்ணிக்கிறார்.. உலகில் மாமியாரின் அழகை வர்ணித்த ஒரே பெண் ஆண்டாளாகத் தான் இருக்க முடியும்.. சரிதானே!

மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ 
நேரிழையீர்
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்
சிறுமீர்காள்
 கூர்வேல் கொடுந்தொழிலன் 
நந்தகோ பன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை 
இளம் சிங்கம்
 கார்மேனி செங்கண் கதிர்மதியம் 
போல் முகத்தான் 
நாரா யணனே நமக்கே 
பறை தருவான்
 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


No comments:

Post a Comment