T 3 என சுருங்க அழைக்கப்படும் இவ்விழாவிற்கான அழைப்பு முதலில் ஷாஜகான் ஸார் பதிவில் நண்பர்களுக்கு பொதுவில் வைக்கப்பட்டிருந்தது.. ஏற்கனவே இருமுறை அவரை சந்திக்க இருந்து அது முடியவில்லை.. இம்முறை அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது அதனால் நிச்சயம் ஒருநாளாவது அங்கு போவது என முடிவெடுத்து இருந்தேன்.
இடையில் பெருமழையால் சென்னையில் பல வேலைகள் தள்ளிப்போக 2 நாட்களும் போகும் சூழல் ஏற்பட்டது.. நான் முகநூலில் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் நான் ராஜா மகள் நிச்சயம் 2 நாளும் வரவேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார்.. நிச்சயம் 2 நாட்களும் வருகிறேன் என உத்திரவாதம் அவருக்கு தந்துவிட்டேன். ஆனால் அதற்கும் வினை வந்தது.
நிகழ்ச்சிக்கு சரியாக 4 தினங்களுக்கு முன் புதிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு 16,17 &18 ஆகிய மூன்று தினங்களும் எனக்கு படபிடிப்பு கொஞ்சம் படபடப்பும் வந்தது.லதா அருணாச்சலம் அங்கு போகிறார் எனத்தெரிந்ததும் ராஜாமகளிடம் நான் 18 ஆம் தேதி வரமுடியாது ஆனால் நிச்சயம் 19 ஆம் தேதி வருகிறேன் எனத் தகவல் சொல்லச் சொன்னேன்.
எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது 18 ஆம் தேதி மதியமே படபிடிப்பு முடிய உடனே கிளம்பிவிட்டேன். சரியாக மாலை 5 மணிக்கு மண்டபத்தை நெருங்க ஷான் கருப்பசாமியும் ஶ்ரீதர் சுப்ரமணியமும் ஒரு கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள் உங்களைப்பத்தி தான்பேசிகிட்டு இருந்தோம் கரெக்டா வர்றீங்க என்றார்ஷான் சேர்ந்தே மண்டபத்திற்குள் நுழைந்தோம். மேடையில் ஷாஜகான் ஸார் பேசிக்கொண்டிருந்தார்.
பிரபா சுப்ரமணியன் தேநீருடன் வரவேற்றார்.. ஆதித்யா ஆதித்யா, கார்த்திக் புகழேந்தி, தமிழ் அரசி, லதா அருணாச்சலம், மரியா சிவானந்தம் என அறிந்த முகங்களும் பல அறியாத முகங்களும் இருந்தனர்.. ராஜாமகள் மேடையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.. அவருக்கு உதவியாக அவரது குடும்பத்தினரும்.. மாலை ஞானி அவர்களின் பரிட்சார்த்தா குழுவினரின் நாடகம் இருப்பதாக அறிவித்து விட்டு ஷாஜகான் ஸார் மேடையிலிருந்து கீழிறங்கி
என்னைப் பார்த்ததும் விழிகள் விரிய புன்னகைத்தார்.. விரைந்து அவரை தழுவி கை குலுக்கிக் கொண்டேன்.. வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.. வாங்க சாப்பிட போகலாம் என்னும் குரலுக்கு திரும்பினால் ராஜாமகள்.! குருவை வணங்கினோம் பிரமாதமான சுண்டல் வாழைக்காய் பஜ்ஜி டீ என எளிய சுவையான சிற்றுண்டி.. இங்கு பரிமாறிய உணவுகளை தனிப்பதிவாக போட உத்தேசம்..ஆகவே வாங்க ஞானி ஸார் நாடகம் பார்க்க போலாம்.
வரும்...
No comments:
Post a Comment