Sunday 27 December 2015

3. ஓங்கி உலகளந்த...

#ஆண்டாள்_பெருமை

சினிமாவில் மாண்டாஜ் ஷாட்டுகள் என்னும் ஒரு வகை உண்டு.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு காட்சிகள் ஆனால் அனைத்தும் அது தொடர்பானவை. உதாரணமாக முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருந்துவிட்ட பின் நாடெங்கும் வெவ்வேறு ஊர்களில் மக்கள் அவரது ஆட்சியின் சிறப்பைப் பற்றி டிவியில் கூறுவார்கள். இது மாண்டாஜில் ஒரு வகை.

பாலுமகேந்திரா மணிரத்னம் படங்களில் மாண்டாஜ் காட்சிகள் பாடலில் இடம் பெறும் கலைஞன் படத்தில் வரும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா பாடல் மாண்டாஜுக்கு நல்ல உதாரணம்.இந்த மாண்டாஜ் உத்தியை ஆண்டாளும் கையாள்கிறார். 

ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருக்கிறார்கள் பெண்கள் அவரை வணங்குவதால் என்னவெல்லாம் நடக்கும்? அப்படியே ஷாட்டை இங்க கட் பண்ணா.. நாட்டில் தீயவை அழிகிறது மாதம் மும்மாரி பொழிகிறது நெல்கள் செழிப்பாக வளர்கிறது.. அந்த வயல்களிடையே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.. அதன் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகிறது..

மடி நிறைய பால் நிறைந்திருக்கும் பசுக்கள் கறப்பதற்கு முன் தானாகவே கொடுத்த வள்ளல் போல பாலை சுரக்கிறது.. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனயும் மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் இயக்குநர் இமயம் ஆண்டாள்.

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.




No comments:

Post a Comment