Sunday 27 December 2015

2. வையத்து வாழ்வீர்காள்...

#ஆண்டாள்_பெருமை

Universal என்னும் வார்த்தைக்கு உலகெங்கும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை உதாரணமாகச் சொல்லலாம்.பெண்கள் மேக்கப் போட உடை மாற்றி கிளம்ப ஆகும் நேரம் இதையெல்லாம் கிண்டலடித்து துணுக்குகள் படித்திருப்போம்.

இன்று பல வீடுகளிகளில் அழகு சாதனப் பொருட்கள் அத்யாவசியப் பொருட்களாகி விட்டன. மாதம் சில பல ஆயிரங்கள் அதற்குச் செலவும் ஆகிறது. ஆனால் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அதன் பின் கண்ணில் மையிட்டுக் கொள்வதில்லை தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்தப் பெண்ணும் சொல்வாளோ..!!

பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைபிடிக்கும் ஆண்டாள் சொல்கிறார். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என சாப்பாடும் விஷயத்தில் மட்டும் விரதம் இருப்பது பெரிதல்ல.தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. 

செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பது பெரிதல்ல
பெண்ணின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்னும் போது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் புரியும்.

மார்கழி 2ஆம் நாள் பாடல் :

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே 
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் 
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் 
சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் 
ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாற் எண்ணி 
உகந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment