Sunday 27 December 2015

8. கீழ்வானம் வெள்ளென்று...

#ஆண்டாள்_பெருமை

தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். கண்ணன் ஆ வென்று வாய் பிளந்த போது அவரது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாமும் தெரிந்தது..  அது தான் உலகின் முதல் கூகுள்.. காட்டியது நம் கோகுல்..

நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி திருவிளையாடல் தருமி சொல்வது போல எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி... என அதை ஆராய்ந்து நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் ஆயர்குலக் கண்ணன்.. ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப் பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்.

அவனைச் சேவிக்க என்ன செய்ய வேண்டும் உறங்கும் பெண்ணே..? பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல்வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம் நீ எழுந்து வா..

குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன் சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை வீழ்த்தியவன் தேவாதி தேவன் அவன் அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான் என்கிறார்.. கண்னனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்றால் கண்ணனே வருவான் போல.

மார்கழிப் 8ஆம் நாள் பாடல்...

கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment