Monday 23 December 2013

ஆழிமழைக்கண்ணா...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 4 ஆம் நாள் பாடல்......

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாளு உரை.....

கடலு மேறி பெத்த பேரும் பெர்மய்யும் வச்சினிருக்குற மழ மேக கண்ணா! நீ ஒன்யயும் மர்ச்சி வக்காத்தே! கட்லுக்குள்ள போயி நெர்யா தண்ணிய நீ எட்த்துகினு சொம்மா பெர்ய சவுண்ட் ஓட மேல எய்ந்திரு ! நம்மள காத்துனு இர்க்குற கடவுளு பெர்மாளு மேறி உர்வத்துல கருப்பாய்டு ! படா சோக்கா பெர்மயா அயகான தோளு இர்க்கும் பத்ம நாபனோட கய்ல  தக தகன்னு மின்னிலு கணக்கா மின்னினு கீதே சக்ரம் அந்தொ வெள்ச்சத்த காட்டிகினு அவர்ரோட இன்னுரு கய்ல கீதே வலொம்சங்கு அத்து மேறி சொம்மா நின்னு பெர்சா ஊது ! அந்த பெர்மாளோட்ட வில்லு சாரங்கொம் அப்டின்னு ஒண்ணு இர்க்குதெ அத்துல இர்ந்து புர்ப்பட்ட அம்புங்கோ எப்டி அம்பு மழயா பெய்தோ அதே மேறி  இந்த ஒல்கம் நல்லா இர்க்கவும் நாங்க குஷியா இந்த மார்களி மாசம் குள்ச்சிடவும் ஒன் அருள மழயா பொழ்ஞ்சிரு.....


எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....




No comments:

Post a Comment