Saturday 28 December 2013

உங்கள் புழக்கடை...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 14 ஆம் நாள் பாடல்...


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.




ஆண்டாளு உரை :


உன்வூட்டு பின்னாடி இர்க்குதே தோட்டொம் அங்க இர்க்குற குளத்தாங்கரயில செங்கழ்னி பூவு பூத்துருச்சி ; ஆம்ப்லு பூவு மலராம மொட்டுங்க மேறி மூடின்னு இர்க்குது ; 

சிர்ச்சா வெள்ள கலர்ல பல்லு தெர்யற காவி வேஸ்டி கட்ன சாமிங்கோ அவுங்க பொர்ப்பா இருக்குற கோயில தொர்க்க சொல்லோ சுகுரா புறப்ட்டு போய்க்கினாங்கோ: 

அல்லாத்துக்கும் மின்னாடியே எயுந்து வந்து உங்க அல்லாரையும் எயுப்புவேன்னு வாயால முயம் போட்டு பேஸ்ன பொண்ணே ! நீயே தூங்கிக்கினு இர்ந்தா எப்டி எயுந்துரு! ஒன்க்கு வெக்கமா இல்ல...ஒன் நாக்குனால கன்னம் வரிக்கும் கியியுது வாய்துடுக்கு !

நாம கம்முனு கிடக்காம நீளமான கய்யில சங்கும் சக்கரமும்  வச்சினுகிராரே அவுர...  அவ்ரோட கண்ணு தாமுர பூ கணக்கா இர்க்குற அயக பாடினு இர்ப்போம்.... எயுந்து வா கண்ணு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா....





No comments:

Post a Comment