Tuesday 24 December 2013

மார்கழித்திங்கள்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 1ஆம் நாள் பாடல்.....



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

சீரும் செறப்புமா கண்ணன் கொலத்துல பொர்ந்த பொண்ணுகளா! கயுத்துல மூஞ்சில கைல அல்லாம் அயகயகா நகிய போட்டுகினு வர்ற சீமான் வூட்டு செல்லங்களா! கூரான வேல் எட்த்து கடிமிய்யான தொயில் செய்ற நந்தகோபரு பெத்த புள்ள தான் நம்ப நாராயணரு. 

அயகான கண்ணு வச்சினுருக்குற யசோதாம்மா பெத்த சிங்கக்குட்டி...கரு மேகொம் கண்க்கா நெறமும் சூரியன் மேறி சூடும் நெலா கணக்கா ஜில்லுன்னு குளிர்ச்சியும் அல்லாமே அவுரு ஒர்ரே மொகத்துல கீது!

 உனுக்கு விர்ப்பமானத்து இன்னா வோணும்ன்னாலும் அத்த கேட்டா கொட்ப்பாரு, இன்னிக்கு மார்களி மாசொம் பவ்ர்ணமி நாளு! ரொம்ப நல்ல நாளு! ஒலகமே அல்லாத்தயும் புகய்ந்து பேஸ்றா மேறி குள்ச்சிடலாம் வாங்க கண்ணுங்களா....


 

 

No comments:

Post a Comment