Monday 23 December 2013

புள்ளும் சிலம்பின காண்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 6 ஆம் நாள் பாடல்....


புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை.....

பர்க்குற பரவைங்க அல்லாம் கொரல் உடுதுங்கோ...கயுகுக்கு தலீவரான நம்ம பெர்மாளோட 

கோய்ல்ல இர்ந்து வெள்ள சங்குல கொடுக்குற பெர்ய சவுண்ட்டு ஒன் காதுல வுயுலயா? 

பூதொம் கண்க்கா வந்த பேய்யோட மார்ல தட்வுன விஷத்த குட்ச்சவனே...டகால்டி  

காட்டிகினு வந்த சனியன் சகடைய கால தூக்கி அழ்ச்சவனே... பால்கடலு மேல பாம்போட 

பட்த்து கிட்ந்தவனே... இந்த ஒல்கத்துக்கே நீ தான் மொத ஆளு.... பெர்ய பெர்ய 

மினிவருங்கோ அல்லாம் உன்ய மன்சுல நென்ச்சிக்கினு மொள்ளமா எயுந்து "அரி" அப்டின்னு 

சொல்லோ சொல்லோ அதுல வர பெர்ய சவுண்ட்டு நம்ம மன்சுல நுள்ஞ்சு அப்டியே நம்மள 

கூல் ஆக்கி பச்ச புள்ள கண்க்கா ஆக்கிரும்..... ஜல்தியா எய்ந்துரு கண்ணு....

















No comments:

Post a Comment