Tuesday 24 December 2013

நோற்றுச் சுவர்க்கம்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 10 ஆம் நாள் பாடல்..


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை....

விர்தமிர்ந்து சொர்க்கதுக்கு உள்ளாற போற அம்மோ... வாசக் கத்வு தான் தொர்க்கலை ஒரு கொரலாவது உட்டு பதில் பேஸ்னா இன்னா? சோக்கா வாஸ்னை வர்ற துள்சி மாலிய கயுத்துல போட்டுனு இர்க்கறவரு நம்ம நாராயண்ரு..

 நம்மால பெர்மையா ஊரே பேஸ்ரா மேறி விர்தம் இருக்க சொல்லோ அத்த பாராட்டி பேரின்ப்பமாமே அப்படி ஒரு குஷிய அவரு நம்க்கு தர்வாராம்... மின்னாடி ஒரு காலத்துல யமங்கிட்ட வாய் உள்றி யமன் வாய்ல வுயுந்து சாபம் வாங்கிக்கினானே கும்பொகர்ணன்...

இன்னா அவனுக்கும் உனுக்கும் போட்டியா நட்க்குது? இல்ய அவன் உன்னாண்ட தோத்து ஜகா வாங்கிகினான் போல...  அவன் தூக்கத்தை நீ பரிசா வாங்கிக்கினியா?அதான் அட்ச்சி போட்டது கண்க்கா தூங்கினு இருக்கியா? என் காசு மாலையே, ஒட்டியாணமே, என் தங்கமே எயுந்துரு கண்ணு... தூங்கினது போதும் வந்து கதவொ தொற தங்கம்...


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....

No comments:

Post a Comment