Monday 23 December 2013

கீசு கீசு என்று...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 7ஆம் நாள் பாடல்....


கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை: 

கண்ணன பேய் மேறி நென்ச்சுகினு இருக்குற பொண்ணே...ஆனசாத்தான் அப்டின்னு 

அல்லாரும் சொல்ற செம்போத்து வலியங் குர்விங்கோ ஒன்யோட ஒன்யா சேந்து குஜாலா 

பேசிக்கினு இர்ந்த பேச்சு நீ கேட்டியா இல்லியா? ஆய்ச்சிமாருங்களோட வாஸ்ன வர்ற 

தலமுட்யும் கயுத்துல போட்ட அயகான காஸ் மாலயும் அத்தோட இர்க்குற தாலி கவுறும் 

கல்கல்னு சில்ரய அள்ளி போட்டது கணக்கா ஒன்யோட ஒண்யு உரசுர சவுண்ட்டும்..... 

மத்தெட்த்து தய்று கடிய சொல்லோ கய்யி மின்னாலயும் பின்னாலயும் போற நேர்த்துல வர்ற 

சவுண்ட்டும் நீ கேக்கலியா? நீ தான் அல்லாத்துக்கும் மூத்த பொண்ணு..... அந்த நாராயண 

மூர்த்திய,கேசவர நாங்க பாடிகினு இர்க்கோம்...நீ கேட்டுகினு இர்க்கியா   

இல்லியா? தெர்யல...... வெள்ச்ச்மா இர்க்குற பொண்ணே.... கதவ தொறடி தங்கொம்...

No comments:

Post a Comment