Monday 23 December 2013

தூமணி மாடத்து...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 9 ஆம் நாள் பாடல்..


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.


ஆண்டாளு விளக்கம்:

சுத்தப்பச்ச கலர்ல்ல மாணிக்க கல்லுங்களப் பதுச்சு விள்க்கு வக்கிற மாட்த்த சுத்தி அயகயகா விள்க்குங்கள பத்த வச்சு நெல்லா அல்ங்காரமா எர்யாவுட்டு... சொம்மா நின்னு வாஸ்னை காட்ற சாம்ராணி புகய வூடு பூரா மண்க்கவுட்டு... 

வாங்கி வச்சினு இர்க்குற எல்வம்பஞ்சு மித்தை மேல பட்த்துகினு இம்மாம் நேர்மா தூங்கினு இர்க்க மாமங்காரன் மவளே.... உன் மணியான வூட்டு கதவு தாப்பாள தொர்ந்து உடு கண்ணு...இதப்பாருங்கோ மாம்யாரே... 

இன்னா ஓன் மருமவள எயுப்ப மாட்யா? அத்து வாய் தொர்ந்து பேசாத பொண்ணா? அல்ல காது டமாரமா பூட்ச்சா?தூக்கித்தில மயங்கி கெடக்கா? அல்ல ஆராச்சும் மாயம் மந்த்ரம் போட்டு கட்டி வச்சிகினாங்களா? 

மாயனுக்கு அல்லாம் பெர்ய மாய்வரு நம்மொ மாதவரு வைகுந்தரு அவ்ரோட அல்லா பேரயும் இம்மாம் நேரம் சொல்லிக்கினே இர்க்கோம்..ராஜாத்தி இன்னுமா எயுந்துருக்கலை...அவங்கள எயுப்பு வுடுங்கோ கண்ணுகளா....


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல.... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....

No comments:

Post a Comment