Sunday 21 February 2016

ஹலோ அமெரிக்கா -1

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 1

பொதுவாக அமெரிக்க வாழ் தமிழர்களைப் பற்றி இங்கிருக்கும் அனைவரும் அவனுக்கென்னய்யா கொடுத்து வச்சவன் சொகுசா வாழுறான் நல்லா காசு வருதுன்னு வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டாங்க இப்படி விமர்சிப்போம். இந்தக் கரையிலிருந்து பார்த்தால் பச்சையாகத் தெரிந்த அந்த பிம்பத்தை அக்கரையில் போய் பார்த்த போது நிஜ வண்ணம் தெரிந்தது.

முதலில் அமெரிக்க வாழ்க்கையே ஒரு மாயவலை... இங்கு செட்டிலாகி இருக்கும் பலர் முதலில் ஒரு அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு பணம் சேர்த்துட்டு அப்படியே இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்பதாகத் தான் நினைத்து வருவார்களாம்.. வந்த பின்பு 5 ஏழு ஆகி 10 ஆகி வேணாம் இங்கேயே இருந்துவிடலாம் என மாறிவிடுவார்கள்.

ஏனெனில் அமெரிக்கச் வாழ்க்கைச் சூழல் அப்படி.. நீங்கள் நம் தமிழர்களை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும் ஏனெனில் அமெரிக்காவின் பருவநிலை அப்படி மொத்த அமெரிக்காவிற்கும் ஐந்து நேர மண்டலங்கள் ஈஸ்டர்ன் நேரம், சென்ட்ரல் நேரம், மவுண்ட்டன் நேரம், பசிபிக் நேரம் மற்றும் அலாஸ்கா நேரம்.. அமெரிக்கா உள்ளேயே ஒரு ஊருக்கும் மறு ஊருக்கும் 3மணிநேர வித்யாசங்கள் உண்டு.

பனியும் வெய்யிலும் விக்ரமாதித்தன் வாழ்க்கை போல காடாறு மாதம்  நாடாறுமாதம் ஆட்சி செய்கின்றன.. இடையில் மழைக்காலமும் கோடையும் உண்டு.. நான்கு பருவநிலைகளும் தவறாது இன்றும் இருக்கும் அதிர்ஷ்டநாடு அமெரிக்கா.. அமெரிக்க மன்னர் என ஒருவர் இருந்திருந்தால் அவர் தாராளமாக மாதம் மும்மாரி பொழிகிறதா என கேட்கலாம்.. 

சென்னை வெயிலுக்கு இணையாக கோடையிலும் சைபீரிய குளிருக்கு இணையாக குளிரிலும் பட்டையை கிளப்பும் பருவநிலையில் நம் தமிழர்கள் வாழப் பழகிக் கொண்டதையே பாராட்ட வேண்டும்.. எவ்வளவு வெயிலையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் குளிர் அப்படி அல்ல ஆளை உருக்கிவிடும்.. எலும்பை கரைக்கும்.. இந்தக் குளிரில் காலை 6 மணிக்கு எழுந்து 9 மணிக்குள் வேலைக்கு போக வேண்டும்.

என்னய்யா பெரும் குளிர் நம்ம ஊட்டி கொடைக்கானல் சிம்லாவை விடவா பெரியது என்போருக்கு.. இது அதற்கெல்லாம் தா(த்)தா.. நான் அங்கு போன மூன்றாவது நாள் காலை முகம் கழுவும் போது மூக்கில் குறுகுறுப்பாக கூசிட திடீரென மூக்கு சூடாகியது.. வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தால் என் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.. தமிழ்நாடு போன்ற வெப்ப நிலத்தில் இருந்து அங்கு ஒரு மாதம் போன எனக்கே இப்படி என்றால் அங்கேயே வாழ்பவர்களுக்கு..

இப்போது அந்த ரத்தம் என் கண்ணில் வடிந்தது...

வரும்..

No comments:

Post a Comment