Thursday 9 January 2014

மாலே மணிவண்ணா....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...


மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

திர்மாலே! மணிவண்ணா! ஆலில மேல்யே தூங்கிகினு இர்ப்பவரே! இந்த மார்களி மாசம் நல்ல நாள்ல குள்ச்சிட சொல்லோ எங்கய பாட்டன் பூட்டன் செஞ்சதயும் அவுங்க கேட்டுகினதியும் கொட்த்து ஒன் அருள கொடு...

ஒல்கத்தியே அலற வெச்சிது ஒன் சங்கு! பால் மேறி அயகா வெள்ளயா இர்க்குற அந்த பாஞ்ச  சன்ய சங்குங்கோ வோணும் ! எம்மாந்தூரத்தில இர்ந்தாலும் அட்ச்சா கேக்குறா மேறி பறமோளம் வோணும்! பாட்ட பாடினு பல்வருசம் இர்க்குற பொலவருங்க வோணும்! 

அயகா எர்யுற வெளக்குங்கோ வோணும்! தில்லா பர்க்குற கொடி வோணும் ! அயகா இர்க்குற விதான்மும் வோணும் ! இதெல்லாத்தியும் எங்களுக்கு நல்லபடியா கொட்த்துரு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா....

No comments:

Post a Comment